நடைபாதையில் வெறுங்கையுடன் நின்றாள். துயரத்தின் நினைவுச்சின்னம். அவள் இனி அவர்களின் தீய நகங்களிலிருந்து எதையும் மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை. அவளால் எண்களை தன் நினைவில் சீராக வைத்திருக்க முடியவில்லை. அதனால் இழப்புகளை எண்ணுவதை நிறுத்திவிட்டாள். அவநம்பிக்கை முதல் பயம், ஆத்திரம், எதிர்ப்பு, விரக்தி, உணர்வின்மை என பல மாநிலங்களை சில நிமிடங்களில் கடந்து வந்தாள். இப்போது அவள் தெருவின் இருபுறமும் உள்ள பலரைப் போலவே கலவரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் ஏறக்குறைய உறைந்த கண்ணீரும், தொண்டையில் வலியும் நிரம்பியிருந்தது.. புல்டோசரின் காலடியில் அவள் உயிர் கிழிந்தது. சில நாட்களுக்கு முன் நடந்த கலவரம் போதாதென்று.

நஸ்மா காலம் மாறிக்கொண்டிருப்பதை அறிந்தாள். தயிர் அவளிடம் கேட்க சென்ற போது ரஷ்மி அவளை பார்த்த விதம் மட்டும் இல்லை. ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தும் பெண்களுடன் சேர்ந்து, ஆழமான அகழிகளால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலத்தில் அவள் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்டதிலிருந்து, அவளைத் தொடர்ந்து சந்திக்கும் ஒரு கனவு பற்றி அது இல்லை. பல விஷயங்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும், தன் பெண்களைப் பற்றியும், தன் நாட்டைப் பற்றியும் அவள் உணர்ந்திருந்த விதங்களும் உள்ளூர மாறிக் கொண்டிருந்தன. அவள் பயந்தாள்.

அவர்கள் நினைத்ததைக் கொள்ளையடிப்பது குடும்ப வரலாற்றில் முதல் முறையல்ல. வெறுப்பின் தீப்பிழம்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் மதவெறிக் கலவரக்காரர்களால் தூண்டப்பட்ட இந்த உணர்வு பாட்டிக்குத் தெரியும் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஒரு சிறு விரல் அவளை இழுத்தது. அவள் திரும்பி ஒரு உதவியற்ற புன்னகையுடன் வரவேற்றாள். அப்போதுதான் அவளின் எண்ணங்கள் மீண்டும் மாறியது...

பிரதிஷ்டா பாண்டியாவின் கவிதையைக் கேளுங்கள்

காட்டு வாசனைப் பூக்கள்

கனமான, இரக்கமற்ற கத்திகள்
குப்பைகளை இழுத்துத் தள்ளி,
வரலாற்றின் பேய்களை தோண்டி,
மசூதிகள், ஸ்தூபிகளை இடிக்கின்றன..
அவர்கள் ஒரு பழைய ஆலமரத்தை கூடப் பிடுங்க முடியும்.
கூடுகள் மற்றும் வான்வழி வேர்கள் என அனைத்தையும் அழிக்க முடியும்..
புல்லட் ரயில்களுக்கு வழி செய்யுங்கள்
மேடைகள் மற்றும் கற்பாறைகளை அகற்றுக
போர்க்களத் தடைகளை அகற்றுக
துப்பாக்கி சூடு நிலைகளை தயார் செய்க.
கூர்மையான இரும்பு நகங்கள்
அடர்த்தியான, எதிர்ப்புத் தன்மையுள்ள மைதானங்களை உடைக்கும்.
எவ்வாறு நசுக்குவது, தெளிவுபடுத்துவது, சமன் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் நீங்கள் அனைத்தையும் முடித்தவுடன்
உமிழும், வலிமையான, மென்மையான, அன்பு நிறைந்த
புத்தகங்களிலிருந்தும் நாக்குகளிலிருந்து விழும்
இந்த மகரந்தச் சேர்க்கைகளை சமாளிக்க வேண்டும்
புல்டோசர்கள் தேவையில்லை
அந்த முரட்டுத்தனமான புத்தகங்களை கிழிக்க
அல்லது தளர்வான நாக்குகளை கிழித்தெறிய வேண்டும்.

ஆனால் காற்றின் முதுகில் தப்பித்து,
பறவைகள் மற்றும் தேனீக்களின் சிறகுகளில் சவாரி செய்து,
நதி நீரில் சறுக்கி,
ஒரு கவிதையின் வரிகளுக்கு அடியில் குதித்துத்
தடையின்றி மகரந்தச் சேர்க்கையை
இங்கே, அங்கே, எல்லா இடங்களிலும்
செய்யும் அவற்றை என்ன செய்வது?

ஒளி, மஞ்சள், உலர்ந்த, பிடிவாதமான தூசி
வயல்வெளிகள், செடிகள், இதழ்கள்
மனங்கள், மற்றும் வழுக்கும் நாக்குகளை ஆக்கிரமிக்கிறது.
பாருங்கள், அவை எப்படி வெடித்தன!
இந்த பூமியைப் பிடித்திருக்கும்
பிரகாசமான பூக்களின் வசிப்பிடங்கள்
காட்டு மணம்,
உங்கள் புல்டோசர் ரிப்பர்களின்
கத்திகளுக்கு இடையில் இருந்து
தடங்களுக்கு அடியில் இருந்து
நம்பிக்கை போல் வளரும் அவற்றைப்
பாருங்கள், அவர்கள் எப்படி வெடிக்கின்றன!

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Illustration : Labani Jangi

मूळची पश्चिम बंगालच्या नादिया जिल्ह्यातल्या छोट्या खेड्यातली लाबोनी जांगी कोलकात्याच्या सेंटर फॉर स्टडीज इन सोशल सायन्सेसमध्ये बंगाली श्रमिकांचे स्थलांतर या विषयात पीएचडीचे शिक्षण घेत आहे. ती स्वयंभू चित्रकार असून तिला प्रवासाची आवड आहे.

यांचे इतर लिखाण Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan