காணொலி தலைப்பு: நாங்கள் இறக்கும் வரை இது ஒன்றுதான் எங்களுக்கு வேலை

பக்கிங்ஹாம் கால்வாய்ப் பகுதிக்கு 2019ம் ஆண்டில் சென்றபோதுதான் முதன்முறையாக அவரைக் கவனித்தேன். ஒரு முக்குளிப்பான் பறவை போல, கால்வாய்க்குள் முங்கி நீருக்கடியில் நீந்தும் அவரின் திறன் என் கவனத்தை ஈர்த்தது. கால்வாய்க்கரையின் கரடுமுரடான மணலுக்குள் வேகமாக கைகளால் துழாவி, அங்கிருக்கும் எவரையும் விட முன்னதாக இறால்களை எடுத்தார் அவர்.

கோவிந்தம்மா வேலு இருளர் சமூகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடியினமாக அச்சமூகம் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே இருக்கும் கொசஸ்தலையாற்றில் சிறு வயது முதற்கொண்டு அவர் சிரமத்துடன் நடந்து இறால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது 70 வயதுகளில் அவர் இருந்தாலும், குடும்பம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களால், இந்த வேலையைத் தொடரும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார். பார்வைக் குறைபாடும் சிராய்ப்புகளும் கூட அவரைத் தடுக்கவில்லை.

இக்காணொளியை, வடசென்னையின் கொசஸ்தலையாறுக்கு அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் பதிவு செய்தேன்.  இறால் பிடிக்க முங்கும் இடைவெளிகளில் அவரது வாழ்க்கை பற்றியும், இது மட்டுமே அவருக்கு தெரிந்த வேலையாக ஏன் இருக்கிறது என்பதைப் பற்றியும் பேசினார்.

கோவிந்தம்மாவின் வாழ்க்கையைப் பற்றி இங்கு நீங்கள் படிக்கலாம் .

தமிழில் : ராஜசங்கீதன்

M. Palani Kumar

एम. पलनी कुमार पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया के स्टाफ़ फोटोग्राफर हैं. वह अपनी फ़ोटोग्राफ़ी के माध्यम से मेहनतकश महिलाओं और शोषित समुदायों के जीवन को रेखांकित करने में दिलचस्पी रखते हैं. पलनी को साल 2021 का एम्प्लीफ़ाई ग्रांट और 2020 का सम्यक दृष्टि तथा फ़ोटो साउथ एशिया ग्रांट मिल चुका है. साल 2022 में उन्हें पहले दयानिता सिंह-पारी डॉक्यूमेंट्री फ़ोटोग्राफी पुरस्कार से नवाज़ा गया था. पलनी फ़िल्म-निर्माता दिव्य भारती की तमिल डॉक्यूमेंट्री ‘ककूस (शौचालय)' के सिनेमेटोग्राफ़र भी थे. यह डॉक्यूमेंट्री तमिलनाडु में हाथ से मैला साफ़ करने की प्रथा को उजागर करने के उद्देश्य से बनाई गई थी.

की अन्य स्टोरी M. Palani Kumar
Text Editor : Vishaka George

विशाखा जॉर्ज, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया की सीनियर एडिटर हैं. वह आजीविका और पर्यावरण से जुड़े मुद्दों पर लिखती हैं. इसके अलावा, विशाखा पारी की सोशल मीडिया हेड हैं और पारी एजुकेशन टीम के साथ मिलकर पारी की कहानियों को कक्षाओं में पढ़ाई का हिस्सा बनाने और छात्रों को तमाम मुद्दों पर लिखने में मदद करती है.

की अन्य स्टोरी विशाखा जॉर्ज
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan