சகாரியா பழங்குடியான குத்தி சமான்யா, மத்தியப்பிரதேச வனத்துறையால் ‘சிறுத்தைப் புலியின் நண்பன்’ என வரையறுக்கப்பட்டிருக்கிறார். “சிறுத்தைப் புலி தென்பட்டால் காட்டு ரேஞ்சரிடம் சொல்ல” அவர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த வேலையாக தோற்றமளிக்கலாம். ஆனால் அந்த வேலைக்கு ஊதியம் இல்லை. ஆப்பிரிக்காவின் சிறுத்தைப்புலிகள், 8,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கடலையும் மலையையும் தாண்டி ராணுவ விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் குனோவுக்கு கொண்டு வரப்படுவதாக சொல்லப்பட்டது. அவற்றின் பயணத்துக்கென பெரும் அந்நிய செலாவணியை இந்திய அரசு செலவழித்திருக்கிறது. தொகை வெளிப்படுத்தப்படவில்லை.
சிறுத்தைப் புலி நண்பர்கள், வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றை பாதுகாக்கவும், அவை சென்று சூறையாடும் வீடுகளில் வசிப்பவர்களிடமிருந்து அவற்றை காக்கவும் உதவுவார்கள். எனவே, குனோ-பால்பூர் தேசிய பூங்காவுக்கு (KNP) அருகே உள்ள கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வசிக்கும் தினக்கூலிகள், விவசாயிகள், பழங்குடிகளை உள்ளடக்கிய 400-500 சிறுத்தைப்புலி நண்பர்களும் தேசத்துக்கு சேவை புரிய தயாராகி விட்டார்கள்.
ஆனால் சிறுத்தைப் புலிகள் வந்திறங்கியதிலிருந்து அவை கூண்டுகளில்தான் அதிக நேரம் அடைக்கப்பட்டிருந்தன. அவை உள்ளே இருப்பதையும் மற்றவர்கள் வெளியே இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் வேலிகளும் குனோ காடுகளில் எழுப்பப்பட்டன. “எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சீசியப்புராவிலும் பக்சாவிலும் புதிய கேட்கள் வந்திருக்கின்றன,” என்கிறார் சிறுத்தைப் புலி நண்பனாக இருக்க பெயர் கொடுத்த ஸ்ரீனிவாஸ்




















