பாகிஸ்தான் எல்லையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சகோதரரின் கராஜில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஷம்ஷெர் சிங் தன் உபகரணங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் இங்கு விருப்பமின்றி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
35 வயது ஷம்ஷெர் மூன்றாம் தலைமுறையாக சுமை தூக்கும் வேலையை செய்கிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் ஒரு காலத்தில் அவர் வேலை பார்த்திருக்கிறார். அவர் சார்ந்த பிரஜாபதி சமூகம், பிற பிற்படுத்தப்பட்ட சமூகமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானுடனான பஞ்சாபின் இந்த எல்லையில் சிமெண்ட், ஜிப்சம் மற்றும் காய்ந்த பழங்கங்களை வந்ததும் நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் அவற்றை அன்றாடம் சுமந்து செல்லும். தக்காளிகள், இஞ்சி, பூண்டு, சோயாபீன், பருத்தி நூல் போன்றவை அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ட்ரக்குகளில் செல்லும்.
“இந்த ட்ரக்குகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை” பார்த்த 1,500 சுமைதூக்கும் தொழிலாளிகளில் ஒருவர்தான் ஷம்ஷெர். அப்பகுதியில் ஆலைகள் எதுவும் இல்லை. அட்டாரி-வாகாவின் எல்லையின் 20 கிமீ சுற்றளவில் இருக்கும் கிராமங்களின் நிலமற்ற மக்கள், பெரிதும் இந்த எல்லை தாண்டும் வணிகத்தைதான் தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள்.









