ஒவ்வொரு மாதமும் ரத்னா பிஸ்வாசுக்கு 15 நாட்கள் தான் வேலை உள்ளது. நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை இருக்கும். அதில் நான் 20 அறைகள் மற்றும் 4 கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தீமார்பூரில் உள்ள தனது கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் அவர் பணிபுரிகிறார். ரத்னா அங்கு வேலை செய்கிறாரா அல்லது முறைசாரா பணியாளரா என்பது கூட அவருக்கு தெரியாது. அவருக்கு ரூ.2 ஆயிரத்து 500 மட்டும் வழங்கப்படுகிறது. மாதத்தின் மற்ற 15 நாட்களும் மற்றொரு தூய்மை பணியாளர் அந்த வேலையை செய்கிறார்.
இந்த அரை மாத சம்பளமும் கிடைக்குமா என்பது 35 வயதான ரத்னாவுக்கு உறுதியாக தெரியவில்லை. ஓராண்டாக பள்ளி எனக்கு பணம் கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நிதி வரவில்லை. அதனால் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று கூறுகிறது.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு பள்ளி பணியாளர்களுடன் டெல்லிக்கு வந்திருந்தார். அவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உத்தர் டினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரன்டிகி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.






