"இன்று மதுபானக்கடைகள் டீ கடைகளைப் போல எல்லா இடத்திலும் பரவலாக இருக்கிறது.முன்பெல்லாம் தொலைவில் இருந்ததால் மக்கள் அங்கு செல்வதற்கு சற்று சிரமப்பட்டனர், ஆனால் இன்று 3கி.மீக்கு ஒரு கடை இருப்பதால் அவர்களால் செல்லமுடியாவிட்டாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டுக்கே வந்து மதுபானத்தை கொடுக்கின்றனர்."
ஏப்ரல் 18 ஆன இன்று 32 வயதான காட்டுநாயக்கன் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ம.வி சாந்தினி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 2கி.மீ தொலைவிலுள்ள அரசு பள்ளிக்கு செல்கிறார். அவர் முன்வைக்கும் கோரிக்கை, "பதவிக்கு வரும் அரசு எதுவாயினும், பாட்டில்களால் நொறுக்கப்பட்ட எங்கள் வீடுகளின் அமைதியை மீட்டுத்தாருங்கள்” என்பதே.
15-17 வீடுகளைக் கொண்ட குக்கிராமமான மச்சிகொல்லியில் வசிக்கிறார் சாந்தினி. அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார என்பதே தெரியாது என்கிறார். இக்குக்கிராமமானது தமிழ்நாட்டின் நீலகிரி மக்களவை தொகுதியிலுள்ள கூடலூர் வட்டதிதிலுள்ள தேவரசோலை பேரூராட்சியின் கீழ் வருகிறது. 2014ன் கணக்குப்படி இங்குள்ள மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.70லட்சம்.
வெற்றி பெறும் வேட்பாளர் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை இவர்களிடம் உள்ளது. மாநிலத்திலுள்ள பல வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் பெண்களைப் போல சாந்தினியும் பெருகிவரும் அரசின் மதுபான கடைகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார். 2002 முதல் அரசு மட்டுமே மதுபானங்களை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (TASMAC) மூலம் விற்பனை செய்கிறது.
எங்களது ஊரிலுள்ள பெரும்பாலான ஆண்கள் விவசாய கூலிகளாக உள்ளனர். அவர்களுடைய ஊதியத்தை குடித்தே செலவு செய்கின்றனர். அவர் பெரும் ரூ250 மதுவிற்கும் குடும்பத்திற்கான உணவிற்கும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் தான் வீட்டில் பிரச்சனை உண்டாகிறது என்கிறார் 3 குழந்தைகளின் தாயான சாந்தினி.






