"எங்களது குழந்தைகள் (வனத்துறையினரின்) இந்த தேக்கு தோட்டங்களை மட்டுமே பார்த்து வளர்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். காடுகள் மற்றும் மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அனைத்து அறிவையும் இதனால் அவர்கள் இழக்க நேரிடும்," என்கிறார் மத்தியப் பிரதேசத்தின் உமர்வாடா கிராமத்தைச் சேர்ந்த லாய்சிபாய் உய்கி அவர்கள்.
இந்தியாவின் வனத்துறை, 1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது, நாட்டின் மிகப்பெரிய ஒற்றை நில உரிமையாளராக இன்றும் அது இருந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இச்சட்டம் வன மற்றும் நிலங்களை பாதுகாப்பது மற்றும் வணிக நோக்கங்கள் (மர விற்பனை போன்றவை) ஆகியவற்றை கையாண்டு வருகிறது, இச்சட்டம் ஆதிவாசிகள் மற்றும் வனவாசிகளை குற்றவாளிகளாகக் கருதி மேலும் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்தே அவர்களை வெளியேற்றப் பயன்படுத்தப்படுகிறது.
சீர்திருத்தச் சட்டத்தைப் போல 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமைகள் சட்டம், இந்த "வரலாற்று அநீதியை" நிவர்த்தி செய்வதற்காக காடுகளில் வசிக்கும் சமூகங்களுக்கு (150 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு) நிலவுடமை உரிமைகளையும், அவர்களின் காடுகளை நிர்வகிக்கும் மற்றும் பாதுகாக்கும் அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கியது. ஆனால் இது போன்ற விதிகள் நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கின்றன.










