குண்டூர் மாவட்டம் நீறுகொண்டா கிராமத்தில், புதிதாக கட்டப்படும் வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், தரையில் சிந்திய பெயிண்ட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வளப்பர்ல திருப்பதம்மா, தற்போது அந்த பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில்," 3-4 ஆண்டுகளாக எங்களுக்கு போதிய வேலைகள் கிடைக்கவில்லை, எனவே எங்களுக்கு இந்த வேலை கிடைத்தப் போது, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானோம்.ஆனால்,அது ரொம்பக் காலத்திற்கு நீடிக்கவில்லை" என்றுத் தெரிவித்துள்ளார். மேலும்,இரண்டு வாரங்களுக்கு பிறகு,29 வயதான வளப்பர்ல திருப்பதம்மா, எவ்வித காரணங்களும் கூறாமல் பணியிலிருந்து விலக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, 40 வயதான உஸ்தல மேரி மாதாவும் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அவர்கள் தரையில் சிந்திய பெயிண்ட் சுத்தம் செய்ய ஒருநாளைக்கு 250 ரூபாய் ஊதியம் அளித்தனர். எப்போது பணி முடிந்ததோ, அப்போது பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறும், நாங்கள் வயதானவர்களாக உள்ளதால் இந்த பணிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று கூறினர்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே 2018 ஆம் ஆண்டு,ஏறத்தாழ 1500 பேர் வசிக்கக்கூடிய, நீறுகொண்டாப் பகுதியிலுள்ள தலித் காலனிக்கு வேலையாட்கள் தேடிவந்த வந்த ஒப்பந்தக்காரர்கள்,மொத்தமாக 20 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட ஒரு குழுவைப் பணிக்கு எடுத்துள்ளனர. இதுகுறித்து 60 வயதான குரகந்தி வஜ்ரம் கூறுகையில்,"எப்போது வேலை இருக்கிறதோ, அப்போது அவர்கள் வந்து எங்களைக் கூட்டிச்செல்வார்கள். சில சாக்குபோக்குகளைக் கூறி, எங்கு வேலை நடைபெறுத்துகிறதோ அங்கு தூரமாக அனுப்பி வைப்பார்கள். எப்போது வேலையாட்களுக்கு பஞ்சமே இல்லையோ, அப்போதிருந்து நாங்கள் வேலையற்றவர்களாக ஆனோம்" என்று கூறியுள்ளார்.
மேலும்,மற்றக் கிராமங்களைச் சேர்ந்த சிலர், அந்தப் பல்கலைக்கழகத்தின் தோட்டவேலை மற்றும் பராமரிப்புப் பணிகளில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அதுவும் எத்தனை நாட்கள் என்று உறுதியாக கூற இயலாது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்படும் தலைநகர் அமராவதியில் 'அறிவுசார் நகரம்' அமைக்கும் திட்டத்தின் பகுதியாக உருவாக்கப்படும், 'அறிவுசார் மையங்களில்' கட்டப்படும் எண்ணற்ற கல்வி நிலையங்களைப் போன்றே தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், இந்த அறிவுசார் மையத்தில் உயர்கல்வி நிலையங்கள்,தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகள், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நிறுவனங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
இந்த நகரில் திட்டமிடப்பட்டுள்ள 74 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பகுதி-1 வரும் 2022 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருமென்றும், பகுதி 2 வரும் 2037 ஆம் ஆண்டு பயன்பட்டு வருமென்றும் ஆந்திர பிரதேச தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (APCRDA)ஆவணம் கூறுகிறது.











