புராணம், இயற்கை, தெய்வீகம், மாறும் காலநிலைகள், அறுவடை சந்தோஷம் என எல்லாவற்றுக்கும் இந்தியாவில் விழாக்கள் இருக்கின்றன. மக்களை ஒன்றாக்கி, மதமாச்சரியம் இன்றி, பாலினம் மற்றும் சாதி பேதங்களை இந்த விழாக்கள் கடக்க வைக்கிறது. பாரம்பரிய தொடர்ச்சிக்காக கொண்டாடப்பட்டாலும் அந்த விழாக்கள், அன்றாட வாழ்க்கை மற்றும் உழைப்பிலிருந்து தற்காலிக விடுதலையை அளிக்கிறது. விருந்துகள், இசை, நடனம் மற்றும் வழிபாடு என பல்வேறு சமூகங்களை சேர்ந்த கலைஞர்கள் செய்யும் பணிகள்தாம் இத்தகைய விழாக்கள் நடக்க காரணங்களாக இருக்கின்றன. பல்வேறு விழாக்களையும் கொண்டாட்டங்களையும் பாரியின் இக்கட்டுரைகள் ஆவணப்படுத்துகின்றன