பிலி பர்தி, 50 வயதுகளின் துவக்கத்தில் உள்ளார். கஸ்தூர்பா சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் வாயிலின் வெளியே வாடிக்கையாளருக்காக காத்திருக்கிறார். தற்போது காலை 9 மணி. சுற்றுலாப் பயணிகள் வெளியே கிளம்பிச்செல்வது துவங்குகிறது. அவரின் மருமகள் அருணாவும் அங்கு இருக்கிறார். இரு பெண்களும், பிலியின் மகனும் மத்தேரனில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.
ஜெயா பேத்கரும் அதே வேலையை செய்கிறார். மற்றவர்களைப்போல் ஜெயாவும் 30 வயதுகளின் மத்தியில் உள்ளார். 10 முதல் 40 கிலோ எடையை ஒரு நாளில் தனது தலையில் 3 முதல் 4 முறை ஓட்டல்களுக்கும், மத்தேரனின் முக்கியச் சந்தை பகுதியிலிருந்து மூணரை கிலோ மீட்டர் தூரமுள்ள வாகன நிறுத்தத்திற்கும் இன்னும் மலையிலிருக்கும் சில ஓட்டல்களுக்கும் சுமந்து வரவேண்டும்.





