![](/media/images/dsc_1979.width-1440.jpg)
மேற்கு ஒடிசாவில் அலுமினிய தாதுப் பொருட்கள் நிறைந்த நியாம்கிரி மலைகள் அம்மாநில டோங்கிரியா கோந்த் பழங்குடியினரின் ஒரே புகலிடம்
![](/media/images/dsc_0170.width-1440.jpg)
திருமணங்கள் எளிமையாக, சடங்குகளுடன் நடைபெறுகிறது. இச்சமூகத்தினர் வேலைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செய்கின்றனர். திருமண சடங்கிற்காக (2009-ம் ஆண்டில்) அண்டை கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் பட்டாளங்கள் உள்ளூரில் புகழ்பெற்ற தாப் கருவியை வாசித்தபடி ஊர்வலமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்
![](/media/images/dsc_0529.width-1440.jpg)
பாடல் மற்றும் இசைக்கு நடுவே விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக் குழுவினர்
![](/media/images/dsc_0024.width-1440.jpg)
பிற சமூங்களைப் போன்று இல்லாமல் டோங்கிரி கோந்துகள் சமூகத்தில் திருமணத்திற்கு முன், மணப் பெண்ணின் சம்மதம் கேட்கப்படுகிறது. லோடோ சிகாக்காவை மணமகனாக, மணமகள் தெலிடி ஏற்றுக் கொண்டாள்
![](/media/images/dscn8122.width-1440.jpg)
தெலிடியுடன் சமூகத்தின் பிற பெண்களும் சேர்ந்து கொண்டு தலையில் பித்தளை தவளைகளை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க வற்றாத மலை ஓடையை நோக்கி புறப்படுகின்றனர். இத்தண்ணீரில் தான் அரிசி சமைக்கப்பட்டு மணப் பெண் சார்பில் தாரணி பெனுவிற்கு (பூமா தேவி) படைக்கப்படுகிறது
![](/media/images/dsc_0196.width-1440.jpg)
மணமகனின் கிராமமான லாக்பாடருக்கு நடனமாடியபடி செல்லும் மணமகளின் தோழிகளை ஆர்வத்துடன் பார்க்கும் கிராம மக்கள்
![](/media/images/01-DSC_0179-PST-A-wedding-in-Niyamgiri.width-1440.jpg)
நடனத்துடன் ஒத்திசையும் தாப்புகளின் ஒலி
![](/media/images/dsc_0243.width-1440.jpg)
நடனம் வேகம் பெறுகிறது
![](/media/images/dsc_0833.width-1440.jpg)
கிராமத்தினர் திருமண விருந்திற்கு உணவு தயாரிக்கின்றனர். அரிசியும் பருப்பும் குறைந்த அளவு எண்ணெய், மசாலா ஆகியவற்றுடன் விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட இறைச்சிகள் இலைகளில் பரிமாறப்படுகிறது
![](/media/images/dsc_0605.width-1440.jpg)
விருந்திற்காக காத்திருக்கும் அச்சமூகத்தின் சிறுபிள்ளைகள்
![](/media/images/dsc_0615.width-1440.jpg)
அன்றைய
நாளின் கொண்டாட்டத்தில் மகிழ்ந்துள்ளார் இச்சிறுமி
தமிழில்: சவிதா