நாகி ஷிவா கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள லோக்கிரே கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் குருபா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். வீடுகளில் உதவியாளராக அவர் வேலை செய்கிறார்.
ஆறு மாத காலங்களில் அவர் தனது அன்றாட வாழ்க்கையை படங்களாக பிடித்துள்ளார்- மரங்கள், வயல்களும் அறுவடையும், விலங்குகள்- கர்நாடகாவின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் முதன்மை புலிகள் காப்பக எல்லையில் அவர் வசிக்கிறார். கேமராவை (ஒரு புஜிஃபிலிம் ஃபைன்பிக்ஸ் S8630) கையாள அவர் முதன்முறையாக கற்றுக் கொண்டார். அவரது புகைப்படக் கட்டுரை வனவிலங்குகளுடன் வாழ்வது பற்றிய மாபெரும் கூட்டு புகைப்படத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாரியில் வெளியான ஆறு புகைப்படத் தொடரில் இது இரண்டாவது. (சிறுத்தையை ஜெயாம்மா கண்டபோது என்ற தொடரின் முதல் கட்டுரை மார்ச் 8, 2017 அன்று வெளியானது.)















