என். ஸ்வாமி பசவண்ணா பந்திப்பூர் தேசியப் பூங்கா அடுத்துள்ள மங்களா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, அவர் அங்கு தனது மனைவி, பிள்ளையுடன் வசிக்கிறார்.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் முதன்மையான புலிகள் காப்பகத்தின் புறநகரில் சுவாமி தனது அன்றாட வாழ்க்கையை, குடும்பம், அண்டை வீட்டார், வேலை, வயல்கள், பயிர்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை புகைப்படங்களாக எடுத்தார். அவரது புகைப்படக் கட்டுரை வனவிலங்குகளுடன் வாழ்வது பற்றிய ஒரு பெரிய கூட்டு புகைப்படத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் பாரியில் வெளியான ஆறு புகைப்படத் தொடரில் இது ஆறாவது கட்டுரை ஆகும் (முதல் கட்டுரை, ஜெயம்மா சிறுத்தையை பார்த்தபோது என்ற கட்டுரை 2017ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வெளியிடப்பட்டது).











