हम सब कटुए हैं
हम सब कटुए हैं, आमात्य!
अपने कटे हुए सर
कटी हुई बाहें
कटे हुए पैर
और क्षत विक्षत आत्माएं लेकर
हम भटक रहें हैं
हम कातर कबंध…
हम सब कटुए हैं, राजन!
हम उस मां के कटे हुए सर हैं
जिसे पातकी पितृत्व की मदिरा से चूर
पाखंडी परशु ने धड़ से अलग कर दिया था
हम अधूरे धड़ से
मां के कटे हुए शीश के कल्ले
माटी में बोते हैं…
हम सब कटुए हैं, राजपुरूष!
हम उस तापस कुमार के भूलुंठित शीश हैं
जिसे खोखली मर्यादा की म्यान से निकाली गई
और जाति दर्प से विष बुझाई तलवार ने
काट दिया था...
जिसे किसी ने नहीं सुना
और जो अट्टहास गूंजता है हमारी संस्कृति कंदराओं में
हम उस कटे हुए शीश के अट्टहास हैं...
हम सब कटुए हैं, राजदंडाधिकारियो!
हम युगों युगों से
उस युवती की रक्त स्रावित नाक हैं
जिसे पुरुष के अहम ने
जिसे राज पुरुष दंभ ने काट दिया था
हमारी नककटी सभ्यता उस युवती के रक्त में
स्नान कर रही है और डुबकी मार
अपना ईश्वर खोज रही है
हम सब कटुए हैं, चक्रवर्ती!
हम उस योद्धा का कटा हुआ अंगूठा हैं
जिसे एक कपटी गुरुता ने काट लिया था
और फिर लगातार कटते रहे अंगूठे
कटते रहे सर
कटती रहीं बांहे
कटती रही उंगलियां
देखो आक्षितिज बिखरे हैं कटे हुए अंगूठे|
देखो उन कटे हुए अंगूठों के निशान ले रही है मंत्रिपरिषद
देखो उन कटे हुए अंगूठों की माला पहन रहे हैं महामात्य
हम सब कटुए हैं, अभिजात्यों!
हम सब कटुए हैं और बहुमत में हैं
हम खड़े हैं इतिहास के राजपथों पर
अपनी कटी हुई पहचान हथेलियों पर सजाए
आप इस देश को छोड़ें सम्राट
अपने नवनीत वदन और संपूर्ण कलेवर के साथ
ये देश हमारा है
ये आर्यावर्त कटुओं का है
சிதைக்கப்படும் உடல்கள்
நாங்கள் அனைவரும் வெட்டப்பட்ட சதைப் பிண்டங்களான, கதுவே.
நாங்கள் அனைவரும் உடைக்கப்பட்ட உயிர்கள், அமாத்யா.
தலைகள், கைகள், கால்கள்
வெட்டப்பட்டு சிதைந்த ஆன்மாக்களுடன்
சுற்றித் திரிகிறோம்.
தலையற்ற முண்டங்களாக வரிசையாக நடக்கிறோம்.
நாங்கள் உடைக்கப்பட்ட சதைப்பிண்டங்கள் கடவுளே.
நாங்கள் அனைவரும்
தந்தைக்காக பரசுராமன்
கோடரி கொண்டு வெட்டிய
தாயின் தலைகள் இழந்த முண்டங்கள்
எங்களின் தாய்களின் வெட்டப்பட்ட தலைகளை
மண்ணில் நாங்கள் நடுகிறோம்
நாங்கள் அனைவரும் எங்களின் தலையற்ற முண்டங்களுடன்
துண்டான தசைகளுடன், அமைச்சரே.
சாதிப் பெருமை நஞ்சு பூசப்பட்ட
வெற்று சுயமரியாதையின் உறையிலிருந்து
உருவப்பட்ட வாளைக் கொண்டு இளந்துறவி
வெட்டி வீசிய தலைகள் நாங்கள்…
எவரும் கேட்க மறுக்கும் நம் பண்பாட்டு குகைகளிலிருந்து எதிரொலிக்கும் சிரிப்பொலி நாங்கள்.
துண்டாக்கப்பட்ட தலையின் சிரிப்பு நாங்கள்…
வெட்டப்பட்ட சதைப்பிண்டம் நாங்கள், கடவுளே
அரசின் ஆட்சியாளர்களே!
பன்னெடுங்காலமாக
ஆணின் அகங்காரத்தாலும் அரசாங்க ஆண்களின்
திமிராலும் வெட்டப்பட்ட பெண்ணின்
ரத்தம் வழியும் மூக்காக நாங்கள் இருக்கிறோம்.
வில்லத்தனமான நம் நாகரிகம்
அந்தப் பெண்ணின் ரத்தத்துக்குள் குதித்து
கடவுளரை தேடுகிறது.
நாங்கள் அனைவரும் சதைப் பிண்டங்கள், பேரரசரே!
ஏமாற்றுக்கார குருவின் பெருமைக்காக
வெட்டப்பட்ட பெருவிரல் நாங்கள்
வெட்டப்பட்ட பெருவிரல்கள்
உருளும் தலைகள்
தொங்கும் கைகள்
வெட்டப்பட்ட விரல்கள்
சிதைக்கப்பட்ட பெருவிரல்களையின் வரிசையை அடிவானத்தில் பாருங்கள்
விரல் ரேகைகளை சேகரிக்கும் அமைச்சர்களை பாருங்கள்
மகாமத்ய முதலமைச்சர் வெட்டப்பட்ட விரல்களின் மாலையை அணிகிறார்
ஆளும் வர்க்கமே நாங்கள் அனைவரும் சதைப் பிண்டங்கள்தான்
நாங்கள் அனைவரும் உடைந்தவர்கள், சதைப் பிண்டங்கள்
நாங்கள்தான் பெரும்பான்மை.
வரலாற்றின் ராஜபாட்டையில் நாங்கள்
சிதைந்த அடையாளங்களின் அலங்காரத்துடன் நிற்கிறோம்.
நீயோ தினம் மாறும் உன் முகம் மற்றும் உடலுடன்
இந்த நாட்டை விட்டு சென்றுவிடு பேரரசே.
இந்த நாடு எங்களுக்கு சொந்தம்
ஆரியர்களின் நிலமாக நீ சொல்லும் ஆரியவர்த்தம்
சிதைக்கப்பட்டவர்களுடையது.