“கான்க்ரீட் காடு போலாகிவிட்டது,” என்கிறார் கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் உச்காவோன் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சஞ்சய் சவான். கடந்த பத்தாண்டுகளில் உச்காவோனில் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை கூடி விட்டது. நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.

“எங்களின் கிணறுகளில் இப்போது தண்ணீர் இல்லை,” என்கிறார் 48 வயது விவசாயி.

மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர், சங்கலி, சதாரா போன்ற பகுதிகளில் இருக்கும் 14 சதவிகித கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதாக மகாராஷ்டிராவின் நிலத்தடி நீர் புத்தகம் (2019) குறிப்பிடுகிறது. கிணற்றின் சராசரி ஆழம் 30 அடியிலிருந்து 60 அடியாக கடந்த இருபது வருடங்களில் ஆகி விட்டதாக சொல்கிறார் ஆழ்துளை கிணறு ஒப்பந்ததாரர், ரத்தன் ராதோட்.

உச்காவோனில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பெருமளவில் நிலத்தடி நீரை உறியும் ஓர் ஆழ்துளைக் கிணறு இருப்பதாக சொல்கிறார் சஞ்சய். “இருபது வருடங்களுக்கு முன், 15-20 ஆழ்துளைக் கிணறுகள் உச்காவோனில் இருந்தன. இன்று 700-800 இருக்கின்றன,” என்கிறார் ஊரின் முன்னாள் துணைத் தலைவர் மதுகர் சவான்.

உச்காவோனின் தினசரி நீர்த் தேவை 25லிருந்து 30 லட்சம் லிட்டராக இருக்கிறது, ஆனால் கிராமத்தில் 10-12 லட்சம் லிட்டர் நீர்தான் ஒரு நாள் விட்டு ஒருநாள் கிடைக்கிறது,” என்கிறார் மதுகர். இச்சூழல், கிராமத்தில் ஒரு பெரும் நீர் நெருக்கடியை உருவாக்கும் என்கிறார் அவர்.

இக்குறும்படம், கொல்ஹாப்பூரில் குறையும் நிலத்தடி நீரால் பாதிக்கப்படும் விவசாயிகளை காட்சிப்படுத்தி இருக்கிறது.

காணொளி: தண்ணீரைத் தேடி

தமிழில்: ராஜசங்கீதன்

Jaysing Chavan

جے سنگھ چوہان، کولہا پور کے ایک فری لانس فوٹوگرافر اور فلم ساز ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jaysing Chavan
Text Editor : Siddhita Sonavane

سدھیتا سوناونے ایک صحافی ہیں اور پیپلز آرکائیو آف رورل انڈیا میں بطور کنٹینٹ ایڈیٹر کام کرتی ہیں۔ انہوں نے اپنی ماسٹرز ڈگری سال ۲۰۲۲ میں ممبئی کی ایس این ڈی ٹی یونیورسٹی سے مکمل کی تھی، اور اب وہاں شعبۂ انگریزی کی وزیٹنگ فیکلٹی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Siddhita Sonavane
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan