தனது முதல் தொகுதி கேழ்வரகு நிராகரிக்கப்பட்ட போது ஜெயராம் சாகிரி ஏமாற்றம் அடைந்தார். "அது சுத்தமாக இல்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்", என்று தெரிவித்தார் அவரது தானியத்தில் உமி இருந்தது.
2019ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெயராம் கோராபுட் மாவட்டத்தின் சிமிலிகுடா வட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பாதா தேமாவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டுலி கிராமத்தில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கிற்கு தலா 50 கிலோ எடையுள்ள 12 மூட்டைகளை எடுத்துச் சென்றார். அவரது கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு மற்றும் தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறிகள் ஆகியவற்றை தலா ஒரு ஏக்கர் நிலத்திலும் மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களையும் பயிரிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில், அதாவது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் 65 வயதாகும் ஜெயராம் தனது கேழ்வரகினை குறைந்தபட்ச ஆதாரவு விலையில் (MSP) விற்க குண்டுலியில் உள்ள பெரிய அளவிலான விவசாய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துடன் (LAMPS) ஒப்பந்தம் செய்துகொண்டார்.
ஆனால் இந்த ஆண்டு அது சுமார் 20 - 22 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் LAMPS ஒரு கிலோவுக்கு 29 ரூபாய் வழங்குகிறது என்று அவர் கூறினார். 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு காரிப் பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2896 ரூபாய் வழங்கியது - அதுவும் 2017 ஆம் ஆண்டுக்கான காரிப் பருவத்திற்கான விலையான 1900தில் இருந்து அதிகரித்துள்ளது.
மாநில வேளாண்மை துறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் குழு LAMPS (இது ஒடிசாவின் பழங்குடியினர் மேம்பாட்டு கூட்டுறவு கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது) மூலமாகவும், இப்படி அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறையின் ஆரம்ப வேளான் கடன் சங்கத்தின் மூலமாகவும் மொத்தமாக இவ்வளவு கேழ்வரகை வாங்குவது இதுவே முதல் முறை.
இந்த கொள்முதல் ஒடிசா அரசாங்கத்தின் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக குறிப்பாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டுறவுத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில் "சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை கருத்தில் கொண்டு மாநில அரசு பொதுவிநியோக திட்டம் (PDS), ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) மற்றும் ஒடிசா மாநிலத்தின் மதிய உணவு திட்டம் (MDM) ஆகியவற்றில் சிறுதானியங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது", என்று கூறியுள்ளது.








