மகாராஷ்டிராவின் விவசாய தற்கொலையின் மையத்தில் உள்ள வாரா கவ்தா கிராமத்தில் உள்ள அபர்ணா மாலிகரின் வீடு, 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 8:27 மணி அளவில் சலசலத்துக் கொண்டிருந்தது.
ஏழு வயதாகும் ரோகினி மங்கலான விளக்கு பொருத்திய அறையில் பொறுமையின்றி நின்று கொண்டிருந்தார்: மூன்று நிமிடத்திற்கு எப்படி இவ்வளவு நேரம் ஆகும்? 8:30 மணிக்கு அவரது தாய் அபர்ணா பங்குபெறும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது, அதை காண்பதற்கு பாதி கிராமமே அவர்களது மூன்று அறைகள் கொண்ட மண் வீட்டில் குவிந்திருந்தது, தொலைக்காட்சி இருக்கும் ஒரு சில வீடுகளில் இதுவும் ஒன்று. நிச்சயமாக நிகழ்ச்சியின் முடிவு என்ன என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும்: 27 வயதாகும் விவசாய கணவரை இழந்த பெண், இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் அவர் ஒரு பருத்தி விவசாயி என்பது அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. அதனால் தான் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமம் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் சிறப்பு அத்தியாயமான, இரண்டாவது வாய்ப்பு என்ற அத்தியாயத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிதாப் பச்சன் உடன் அமர்ந்து அபர்ணா விளையாடிய மகிமைமிக்க தருணத்தைக் காண அபர்ணாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறது.
தொலைக்காட்சியில் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருக்கும் தனது தாத்தா அருண் டாதேவை, ரோகினி சத்தம் போடுகிறார். "சோனி அலைவரிசைக்கு மாற்றுங்கள்!" அவர் புன்னகையுடன் அதற்கு கட்டுப்படுகிறார். அமைதியின் வெளிப்பாடு, தூக்கத்தில் இருந்த அவரது 4 வயதாகும் தங்கை சம்ருதி மற்றும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இருந்து தீங்கற்ற முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களின் தந்தை சஞ்சய், ஆகியோரின் முகத்தில் மட்டுமே காணப்பட்டது.
அபர்ணா மகிழ்ச்சியாக காணப்பட்டார். செப்டம்பர் 10-ஆம் தேதி நிகழ்ச்சியின் பதிவிற்கு பின்னர் அமிதாப்பச்சன் தனக்கு ஒரு தனிப்பட்ட பரிசாக காசோலை ஒன்றை அனுப்பினார் என்று அவர் கூறுகிறார். "அவர் எனக்கு 50,000 ரூபாய் அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்", என்று அபர்ணா கூறுகிறார். "ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கண்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். நான் வியப்பில் ஆழ்ந்தேவிட்டேன்", என்ற அபர்ணா கூறுகிறார்.
அந்நடிகர் தனது வலைப்பதிவில்: "இந்த அற்புதமான நிகழ்ச்சியில் மனவலி கொண்ட இதயங்களுக்கு மத்தியில் நான் நேரம் செலவழித்த பிறகு சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லாமல் போய்விடும் என்று நான் அஞ்சுகிறேன்" என்று எழுதினார்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த 10 விவசாய விதைகளில் இருந்து அபர்ணாவை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி தேர்ந்தெடுத்தது. விவசாயிகள் இயக்கமான, விதர்பா ஜன அந்தோலன் சமிதியினைச் சேர்ந்த கிஷோர் திவாரி தான் அந்த பத்து பேரையும் பரிந்துரைத்தார்.
அவர்களின் குழு என்னை நேர்காணல் செய்ய இங்கே வந்தது; அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனக்கு ஒரு கேள்வித்தாளை வழங்கினர் என்று நினைவு கூர்கிறார் அபர்ணா. திருமணமான எட்டு ஆண்டுகளில் தன் மகள் இவ்வாறு சிரிப்பதைத் தான் கண்டதில்லை என்று அவரது தாய் லீலாபாய் கிசுகிசுத்தார்.
திருமணத்தின் பொருள் வேலை, கடன்கள் மற்றும் சண்டைகள் என்பதே. அப்போது 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தான்போரி அருகில் சஞ்சய் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். அப்போது ரோகினிக்கு 4 வயது தான் ஆனது, அவளது தங்கைக்கோ ஒன்பது மாதமே ஆனது. "சமுதாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள", தான் இன்னும் தாலியை அணிந்து இருப்பதாக அபர்ணா கூறுகிறார்.
ஆனால் இப்போது உற்சாகமூட்டும் நேரம். மணி 8:30 ஆனது. அபர்ணாவுக்கு தனது வாழ்க்கையை வாழ இரண்டாவது வாய்ப்பு வழங்க நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி விரும்புகிறது என்று பச்சனின் குரல் பார்வையாளர்களுக்கு தெரிவித்தது.
எப்படி இருந்தாலும் முதலில் அமிதாப்பச்சன் கடந்த இரவிலிருந்து போட்டியில் பங்கேற்று வரும் பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமாரை முதலில் பார்க்க வேண்டும் அவர் "மிக அருமையாக" விளையாடிக் கொண்டிருக்கிறார். அபர்ணாவின் வீட்டில் நிறம்பி இருக்கும் அந்த தொலைக்காட்சி அறையில் உள்ள மக்களால் இனியும் காத்திருக்க இயலாது.
இரவு 8:45 மணி. அடக்கொடுமையே! விளக்குகள் அணைக்கப்பட்டன. "கரண்ட் போயிடுச்சு", என்று கூட்டத்தில் இருந்த குழந்தை ஒன்று கத்தியது. "அமைதியாக இரு. நீண்ட நேரம் ஆகாது", என்று பெரியவர் ஒருவர் அறிவுறுத்தினார். அவர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. 8:50 மணிக்கு மீண்டும் விளக்குகள் எரிந்தன. ஆனால் அப்போது இடைவேளை, விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. காத்திருப்போ நீண்டது.




