பணப்பயிர்கள், கோவிட் மற்றும் விற்பனையாகாமல் இருக்கும் பருத்தியின் விலை
இந்தியா முழுவதும் விற்பனையாகாமல் பெருமளவிலான பணப்பயிர்கள் குவிந்து கிடக்கின்றன - மகராஷ்டிராவில் பருத்தியை போல. ஒரு நெருக்கடியான பட்டினி கிடக்கும் சூழ்நிலை நிலவினாலும் விதர்பாவில் உள்ள விவசாயிகள் மீண்டும் இந்த காரீப் பருவத்தில் பருத்தியைதான் விதைக்க திட்டமிட்டுள்ளனர், உணவுப் பயிர்களை அல்ல.