தமிழ்நாட்டின் ஓசூர் தாலுகாவில் ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் உலர வைக்கப்பட்டுள்ளன. கேழ்வரகு பயிர்களை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைப்பதால் தண்டிலிருந்து விதைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் வந்து சேரும் என்கின்றனர் விவசாயிகள்.
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் சிலர் கைவிடப்பட்ட சின்ன கொட்டகை நிழலில் நிற்கின்றனர். அவர்களில் நீலநிற காதி வேட்டியும், வெயிலை தாங்க தலையில் முண்டாசும் கட்டியுள்ள 52 வயது நாராயணப்பாவும் ஒருவர். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பலவனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவர் 1.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மழை காலத்திற்குப் பிறகு கேழ்வரகு, கொள்ளு பயிரிடுகிறார். அவரது கிராமத்திலிருந்து ஒரு மணி நேரம் நடந்தால் பரபரப்பான தொழிற்பேட்டையாக திகழும் ஓசூருக்கு சென்றுவிடலாம்.




