உயரமான புற்கள் மற்றும் பல மரங்கள் உடைய காட்டில் கிட்டதட்ட ஒரு மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம். ஆனாலும் காட்டு யானையை எங்களால் பார்க்க முடியவில்லை. 8 பேர் கொண்ட எங்களது குழு கேரளாவின் தொலைதூர பஞ்சாயத்தான எடமால்குடிக்கு சென்றது, ஆனாலும் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. யானை என்று கத்தும் கிராமவாசிகளின் சத்தத்தை எங்களால் கேட்க முடிந்தது ஆனால் யானையை பார்க்க முடியவில்லை. அருகில் உள்ள கிராமங்களில் இருந்த உரிமையாளர்கள் சிலர் குரல்கள் எழுப்பினர், யாரும் தண்ணீருக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர். சொசைட்டிகுடிக்கு செல்லும் வழியில் ஆதிவாசிகள் எங்களை கடந்து சென்றனர், அங்கிருந்து தான் இப்போது நாங்கள் வந்தோம், "அவன் ஆற்றின் கீழே இறங்கி விட்டான். கவனமாக இருங்கள்", என்று கூறினர் ஆதிவாசிகள்.
அந்த நேரத்தில் நாங்கள் மணலாறு நதியை கடக்க முயன்றதால் இது எங்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அங்கு மூங்கில், மரக்கிளைகள், புல்லுருவிகள், கயிறுகள் மற்றும் மரத்துண்டுகளாலான "வாழும் பாலம்" ஒன்று இருந்தது. ஆனால் அது பழுதடைந்து இருந்தது மழைக்காலத்தில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். நாங்கள் அருகிலுள்ள வயலுக்கு மீண்டும் திரும்பினோம். சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. எங்களுடன் இருந்த வன கண்காணிப்பாளர் அச்சுதன். எம், முதவன் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவரே, அவருக்கு யானையின் இருப்பிடம் தெரிந்திருந்தது. அந்த தூரத்தில் இருந்த மக்கள் பெரும்பாலும் மரத்தின் மீது அமைக்கப்பட்ட பரண்களை பயன்படுத்தி இருப்பார்கள். ஒருவேளை அங்கிருந்து தான் அவர்கள் அவனை கண்காணித்து கொண்டு இருப்பார்களோ என்னவோ. தனித்து விடப்பட்ட காட்டு யானை ஒரு கெட்ட செய்தியே. அதற்கும் மதம் பிடித்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு மற்றும் எரிச்சலான மந்தையால் துரத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு.
இந்த நேரத்தில் தான் உங்களுக்கு மோசமான யானை கதைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். ஒரு மதம் பிடித்த யானைக்கு அதன் டெஸ்டோஸ்டிரோனின் அளவு சாதாரணமாக இருப்பதை விட 60 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது நினைவு வரும், மேலும் அது சண்டையிடப் போவதாகவும் தோன்றும். நாங்கள் யாரும் அதை கட்டுப்படுத்தப் போவதில்லை (எங்களது டெஸ்டோஸ்டிரோனின் அளவு அவ்வளவு அதிகமும் இல்லை), நாங்கள் ஒரு மரநிழலில் தங்கினோம். ஒவ்வொரு முறை மரங்களுக்கிடையில் ஏதாவது நகர்ந்த போது நாங்கள் அது வனக்காவலரா? அல்லது யானையா? என்று வியந்தோம். இந்த களேபரத்தில், அந்த நேரத்தில் இடுக்கியின் அழகான வனப்பகுதியினை எங்களால் ரசிக்க முடியவில்லை.
கற்றுக் கொண்ட பாடம்: தெரியாத நிலப்பரப்பில் குறுக்கு வழியை ஒரு போதும் நம்ப வேண்டாம். அது அழிவுக்கான அழைப்பு.




