பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.