2024 ஆம் ஆண்டு பாரி நூலகத்தில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது - இவ்வருடம் நாங்கள் அதிகப்படியான கட்டுரைகளை பதிவுசெய்து, காப்பகப்படுத்தி உள்ளோம். சட்டங்கள், புத்தகங்கள், மரபுகள், கட்டுரைகள், தொகுப்புகள், சொற்களஞ்சியங்கள், அரசாங்க அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.
இதற்கிடையில், மற்ற, மிக நிதானமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன - 2024, வெற்றிகரமான ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை வெற்றிகரமான ஆண்டாக கருதப்பட்ட 2023ன் சாதனையை முறியடித்துள்ளது. மாறிவரும் காலநிலை, புலம்பெயரும் உயிரினங்களை பாதித்துள்ளது. அவற்றில் ஐந்தில் ஒன்று இப்போது அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. மேலும் இந்தியாவின் சதுப்பு நிலங்களான, ஸ்பாங், ஜீல், சரோவர், தலாவ், தால், கோலா, பில் மற்றும் செருவு ஆகியவையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
மாசுபாட்டிற்கும் வெப்பத்திற்கும் இடையிலான தொடர்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துகள்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, குறிப்பாக தெற்காசியாவில் மோசமாக இருந்தது. இந்தியாவில் மாசு, ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் ஆகும். இது உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட 11 மடங்கு அதிகமாகும். ஒரு கன மீட்டருக்கு 102.1 மைக்ரோகிராம் மாசு இருந்த புது தில்லி, ரைட்-சோர்சிங் சேவைக்கான வேலை செய்யும் தொழிலாளியின் அனுபவங்களைப் பற்றிய ஒரு காமிக் உருவாகக் காரணமாகும் அளவுக்கு மோசமாக இருந்தது.







