ஏழு வயது மகளுடன் நடைபயணமாக ஒருவர் பந்தன்பூரிலிருந்து ஆஷாதி வாரியில் கலந்து கொள்ள நடைபயணமாக செல்கிறார். மாநிலத்தின் எல்லா பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான வர்காரிகள் வித்தால் கோவிலுக்கு வருவார்கள். போகும் வழியில் அவர்கள், லதூரிலுள்ள மைஸ்காவோன் கிராமத்தில் தங்க முடிவெடுக்கின்றனர். மாலை நேரத்தில் கீர்த்தனை சத்தம் காற்றில் வந்தது. கஞ்சிரா வாத்தியத்தின் சத்தத்தை கேட்டதும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லுமாறு தந்தையை அச்சிறுமி தொந்தரவு செய்தார்.
அவரின் தந்தை தயங்கினார். “இங்குள்ள மக்கள் மகர் மற்றும் எங்களை போன்ற மாங்க் சமூகத்தினரை தொட மாடார்கள்,” என அவர் விளக்க முற்படுகிறார். “நம்மை பயனில்லாதவர்களாக அவர்கள் கருதுகிறார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள்.” ஆனால் சிறுமி ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியில், தூரமாக நின்று நிகழ்ச்சியை கேட்கலாம் என முடிவாகிறது. இசை ஒலிகளை பின் தொடர்ந்து இருவரும் பந்தலை சென்றடைகின்றனர். மகராஜா நடித்துக் கொண்டே கஞ்சிரியை வாசித்து கீர்த்தனை பாடுகிறார். விரைவில் சிறுமியை ஆர்வம் பற்றுகிறது. மேடைக்கு போக விரும்புகிறார். திடீரென சிறுமி எழுந்து ஓடி மேடையில் ஏறி விடுகிறார்.
“நான் பாருத் (கேலியும் கிண்டலும் சேர்ந்து சமூக மறுமலர்ச்சிக்காக பாடப்படும் பழைய பாடல் வகை) பாட விரும்பினேன்,” என அவர் மேடையிலிருந்த துறவியிடம் சொல்கிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மகாராஜா அவரை பாட அனுமதிக்கிறார். அடுத்த சில நிமிடங்களுக்கு சிறுமி, ஒரு உலோகப் பானையைத் தட்டி தாளம் எழுப்பி, ஒரு பாடலை பாடுகிறார். அந்தப் பாடலை எழுதியதும் அங்கிருந்த அதே மகாராஜாதான்.
माझा रहाट गं साजनी
गावू चौघी जनी
माझ्या रहाटाचा कणा
मला चौघी जनी सुना
கிணற்றில் இருக்கும் மரச் சக்கரம், என் அன்பே
நாம் நால்வரும் ஒன்றாய் பாடுவோம்
மரச்சக்கரமும் அதன் முதுகும்
என் மருமகள்கள் நால்வரும்
சிறுமியின் பாடலால் ஈர்க்கப்பட்டு, துறவி அவருக்கு கஞ்சிரியை பரிசாக அளிக்க, அவர், “என் ஆசிர்வாதங்கள் உனக்கு எப்போதுமே இருக்கும். இவ்வுலகுக்கு நீ ஞானத்தை கொண்டு வருவாய்,” என்றார்.













