ஓர் உயிரியயலாளர், ஒரு ராணுவ் அதிகாரி, ஒரு இல்லத்தரசி, ஒரு பூகோள பட்டதாரி.
ராஞ்சியின் மும்முரமான சாலையருகே வித்தியாசமான இந்த குழுவினர் ஒரு கோடை நாளன்று ஒன்று திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி குழுக்களை (PVTG) சார்ந்தவர்கள். தலைநகரின் ஜார்க்கண்ட் பழங்குடி ஆய்வு மையத்தில் எழுதுவற்கான பயிற்சி பட்டறையில் இருந்தனர்.
“எங்களின் குழந்தைகள் தன் தாய்மொழியில் படிக்க விரும்புகிறேம்,” என்கிறார் மாவ்னோ மொழி பேசும் மால் பஹாரிகா சமூகத்தை சேர்ந்த ஜகன்னாத் கிரி. 24 வயதாகும் அவர், 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ளா அவரது தும்கா கிராமத்திலிருந்து ராஞ்சிக்கு மாவ்னோ மொழியின் இலக்கணத்தை எழுத பயணித்து வந்திருக்கிறார்.
நிறைய திட்டங்கள் இருக்கின்றன: “மாவ்னோவில் ஒரு புத்தகம் பிரசுரிக்க விரும்புகிறோம்,” என்கிறார் ஜகன்னாத். அவரது ஊரான பலியகோராவில் உயிரியல் முதுகலை படித்திருக்கும் ஒரே நபர் அவர்தான். அதை அவர் இந்தி மொழியில் படித்திருந்தார். “பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்தினர் பேசும் மொழி, பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகிறது,” எனச் சுட்டி காட்டுகிறார் அவர். “ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டம், கோர்த்தா, சந்தாளி போன்ற பழங்குடி மொழிகளில் இருக்கிறது. ஆனால் எங்கள் மொழியில் இல்லை.”
“இந்த (ஒதுக்கல்) பாணி தொடர்ந்தால், என் மொழி மெல்ல மறைந்து போகும்.” 15 சதவிகித மால் பஹாரியா மக்கள் ஜார்க்கண்டில் வாழ்கிறார்கள். பிறர் அருகாமை மாநிலங்களில் இருக்கின்றனர்.
அவர்களின் மாவ்னோ மொழி திராவிட தாக்கங்கள் கொண்ட ஒரு இந்தோ ஆரிய மொழி. 4,000 பேர் மட்டுமே பேசி, அருகும் நிலையில் இருக்கும் அம்மொழிக்கு அலுவல் மொழி அந்தஸ்து இல்லை. ஜார்க்கண்டின் இந்திய மொழியியல் கணக்கெடுப்பின்படி, மாவ்னோ கல்வி மொழியாக பள்ளிகளில் இல்லை. அதற்கென தனி எழுத்தும் இல்லை.









