இருவரும் 17, இருவரும் கர்ப்பமாக உள்ளனர். சில சமயங்களில் அவர்களின் பார்வையை கீழ் இறக்குமாறு கூறும் பெற்றோரின் அறிவுறுத்தல்களை மறந்து, இருவரும் எளிதில் சிரிக்கின்றனர். அடுத்து என்ன என்று இருவரும் பயப்படுகின்றனர்.
சலீமா பர்வீன் மற்றும் அஸ்மா கதுன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும், 2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் அரசாங்கத்தால் நடத்தப்படும் கிராமப் பள்ளி மூடப்பட்டு இருந்தாலும், கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் இருந்தனர். ஊரடங்கு ஆரம்பித்தப்போது, பாட்னா, டெல்லி மற்றும் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்த தங்கள் குடும்பங்களில் ஆண்கள் பீகார் அரேரியா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான பங்காலி டோலாவில் உள்ள வீட்டிற்கு வந்தனர். திருமண சம்பந்தங்களின் ஒரு சிறிய சீற்றம் தொடர்ந்தது.
"கொரோனாவின்போது திருமணம் நடந்தது" என்று அஸ்மா கூறுகிறார், இருவரில் சற்றே பேசக்கூடியவர். "கொரோனாவின் போது நான் திருமணம் செய்து கொண்டேன்."
சலீமாவின் நிக்கா (திருமண விழா) இரண்டு வருடங்களுக்கு முன்பே முறைப்படி நடத்தப்பட்டது. மேலும் அவர் 18 வயதை நெருங்கியபோது கணவருடன் சேர்ந்து வாழ தொடங்கவிருந்தார். பின்னர் ஊரடங்கு போடப்பட்டது. தையல்காரராக பணிபுரியும் அவரது 20 வயது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் - அவர்கள் ஒரே குக்கிராமத்தில் வாழ்கின்றனர் - அவர் அவருடன் வாழ வேண்டும் என்று என்று வலியுறுத்தினர். அது 2020ம் ஆண்டு ஜூலை மாதம். அவர் வேலை இல்லாமல், நாள் முழுவதும் வீட்டில் இருந்தார், மற்ற ஆண்களும் வீட்டிலேயே இருந்தனர் - கூடுதலாக ஒருவர் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அஸ்மா தன் நிலை குறித்து சிந்திக்க இன்னும் குறைவான நேரம் இருந்தது. அவரது 23 வயதான சகோதரி 2019 ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது சகோதரியின் கணவர், ஒரு பிளம்பர், ஊரடங்கு காலத்தில் அஸ்மாவை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவர்களின் திருமணம் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.
குழந்தைகள் எப்படி பிறக்கின்றன என்பது இவ்விருவருக்கும் தெரியாது. அஸ்மாவின் தாயார் ருக்ஷனா கூறுகையில், “இந்த விஷயங்கள் எல்லாம் தாய்மார்கள் விளக்கமாட்டார்கள்”. "லாஜ் கி பாத் ஹை [இது ஒரு சங்கடமான விஷயம்]." மணமகளின் அண்ணி, அவரது சகோதரரின் மனைவி, இதற்கும் பிற தகவல்களுக்கும் சரியான நபர் என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் சலீமாவும் அஸ்மாவும் மைத்துனிகள்; அவர்கள் குழந்தை தாங்கும் ஆலோசனையை வழங்க எந்த நிலையிலும் இல்லை.









