“மூன்றும், இரண்டும் எத்தனை?“ என்று பிரதிபா ஹிலிம் கேட்கிறார். அவர் முன் தரையில் குழுவாக அமர்ந்திருக்கும் 10 குழந்தைகளுக்கு 7 முதல் 9 வயது வரை இருக்கும். அவர்கள் பதிலாக்க மாட்டேன் என்கிறார்கள். தனக்கு எதிரில் உள்ள பலகையில் (chalk board) எழுதிவிட்டு, குழந்தைகளை திரும்பி பார்த்து, தனது கைவிரல்களால் “5“ என்று கூறி, தலை திருப்பி அவர்களை மீண்டும் சொல்ல வைக்கிறார்.
பிரதீபா, இரும்பு மற்றும் தேலாலான, இரண்டு முட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் கால்களின் உதவியுடன் நிற்கிறார். ஒரு வெள்ளை நிற சாக்பீஸ் அவரின் கைமூட்டுடன் கட்டப்பட்டுள்ள வெல்க்ரோ நாடாவுடன் சொருகப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம் நடக்கிறது. இது பால்கர் மாவட்டம் கார்கேவில் உள்ள ஹிலிமின் 3 அறைகள் கொண்ட சிமெண்ட் வீடு. மஹாராஷ்ட்ராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விக்ரம்காட் தாலுகாவில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிரதிபா, ஆங்கிலம், வரலாறு, மராத்தி மற்றும் கணிதம் ஆகியவற்றை ஜீலை 20ம் தேதி முதல் கற்பித்து வருகிறார். மாணவர்கள் ஒவ்வொரு பிரிவினராக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வருகிறார்கள். அவர்கள் 1,378 பேர் கொண்ட கிராமத்தின் 3 சில்லா பரிசத் பள்ளிகளில் வழங்கிய பாடபுத்தகங்களை எடுத்து வருகின்றனர்.
“அறுவைசிகிச்சை செய்தது முதல், ஒரு சிறிய விஷயம் கூட செய்து முடிக்கக்கூட நீண்ட நேரம் எடுக்கிறது. இதனுடன் எழுதுவது கூட மிகக்கடினமாக உள்ளது“ என்று பிரதிபா கூறுகிறார். அவருக்கு கைகளில் உள்ள வெல்க்ரோ நாடாவில் ஒரு சாக்பீசை சொருகிவிட ஒரு மாணவர் உதவுகிறார்.
கடந்தாண்டு வரை, வர்லி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த பிரதிபா ஹிலிம், 28 ஆண்டுகளாக உள்ளூர் சில்லா பரிசத் பள்ளிகளில் பணியாற்றி வந்தார். 20 வயதில் திருமணமானவுடன், அவர் கணவர் பணிசெய்யும், கார்கேவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவண்டி நகரத்திற்கு சென்றுவிட்டார். அவரது கணவர் பாண்டுரங் ஹிலிம் (50)மூத்த குமாஸ்தாவாக மாநில நீர்ப்பாசன அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவர் அருகில் உள்ள தானே மாவட்டம் கல்வா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, பிரதிபா அங்கிருந்து பிவண்டிக்கு, 2015ம் ஆண்டு ஆசிரியப்பணியை தொடர்வதற்காக மாற்றப்பட்டார்.
2019ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் பிவண்டி புதிய பள்ளியில் அவர் பணிபுரிய துவங்கினார். அவர்கள் கார்கேவில் உள்ள ஹிலிம் குடும்பத்தினரை மாதமொருமுறை வழக்கம்போல் சந்திக்கச்சென்றனர். அப்போது அவர்களின் பிரச்னைகள் துவங்கியது. 50 வயது பிரதிபா அப்போது தசைஅழுகல் நோயால் பாதிக்கப்பட்டார். உடலில் உள்ள திசுக்கள் அழியத்துவங்கும்போது இவ்வாறு ஏற்படும். இது உள்ளுக்குள் இருக்கும் காயம், தொற்று மற்றும் நோயால் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுவதாகும்.
தொடர்ந்து அவரின் இரண்டு கைகள் முட்டி வரையும், இரண்டு கால்கள் முட்டி வரையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.








