பருவமழை தணிந்தது. பீகாரில் உள்ள பராகான் குர்த் கிராமத்தின் பெண்கள் தங்கள் ’குட்சா’ (ஒரு வகை குடிசை) வீடுகளின் வெளிப்புற சுவர்களை அடுக்குவதற்கு வயல்களில் இருந்து சேற்றைப் எடுத்துக்கொண்டிருந்தனர், குறிப்பாக பண்டிகைகளுக்கு முன்பு அவர்கள் அவ்வப்போது அதனை உறுதிச்செய்யவும் அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.
22 வயதான லீலாவதி தேவி மற்ற பெண்களுடன் ஈர மண் சேகரிக்க வெளியில் செல்ல வேண்டும். ஆனால், மூன்று மாதமான அவளது ஆண் குழந்தை அழுதுக்கொண்டே, தூங்க மறுத்தது. அவரது கணவர், 24 வயதான அஜய் ஓரான், அருகில் அவர் நடந்து மளிகை கடையில் இருந்தார். குழந்தை அவரது கைகளில் குவிந்து கிடந்தது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, லீலாவதி காய்ச்சலைச் சோதிப்பது போல அவள் உள்ளங்கையை அவன் நெற்றியில் வைத்துப் பார்க்கிறார். "அவன் நன்றாக இருக்கிறான், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், லீலாவதியின் 14 மாதமான மகள், காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டது. "அது இரண்டு நாட்கள் காய்ச்சல்தான், அதிகமாகக்கூட இல்லை" என்று லீலாவதி கூறினார். அதையும் மீறி, மரணத்திற்கு என்ன காரணம் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை. மருத்துவமனை பதிவுகள் இல்லை, மருந்துவ குறிப்புகள் இல்லை, மருந்துகள் இல்லை. இன்னும் சில நாட்களுக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால், கைமூர் மாவட்டத்தின் அதவுரா தொகுதியில் உள்ள தங்கள் கிராமத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய வாய்க்கவில்லை.
கைமூர் வனவிலங்கு சரணாலயத்தின் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் எல்லைச் சுவர் இல்லை. பராகான் குர்த் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அதை ஒட்டிய பர்கான் கலன் கிராமத்தில் வசிப்பவர்கள் காட்டு விலங்குகள்- சோம்பல் கரடிகள், சிறுத்தைகள் மற்றும் நீலான் - கட்டிடத்திற்குள் அலைந்து திரிந்தன கதைகளை நினைவு கூர்கின்றனர். (இரண்டு கிராமத்திற்கும் பொதுவான ஒரு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது). அவை நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களை பயமுறுத்துகிறது, இங்கே சேவை செய்ய ஆர்வம் காட்டாத சுகாதாரப் பணியாளர்களையும்!
[பராகான் குர்தியில்] ஒரு துணை மையமும் உள்ளது, ஆனால் கட்டிடம் கைவிடப்பட்டது. இது ஆடுகள் மற்றும் பிற விலங்குகளுக்கான ஓய்வுக் கொட்டகையாக மாறியுள்ளது , என்று அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ஆஷா) புல்வாசி தேவி கூறுகிறார். இவர் வரையறுக்கப்பட்ட வெற்றியுடன், தனது சொந்த முயற்சியால் 2014 முதல் பணியைத் தொடர்ந்தார் .






