"எனக்கு விளைநிலங்கள் இல்லை, எனது மூதாதையர்களுக்கும் இல்லை", என்று கமல்ஜீத் கவூர் கூறுகிறார். "ஆனால் என்னால் இயன்றளவு சிறிய உதவிகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நான் இங்கு வந்துள்ளேன், ஏனெனில் நான் அவ்வாறு செய்யாவிட்டால் என் குழந்தைகளின் தட்டுகளில் எதையாவது வைப்பதற்கு நான் பெருநிறுவன பேராசைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்", என்று கூறுகிறார்.
35 வயதாகும் கமல்ஜீத் பஞ்சாபின் லூதியானா நகரை சேர்ந்த ஆசிரியர், அவர் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து சிங்குவில் இரண்டு தையல் இயந்திரங்களை இயக்கி வருகிறார். அவர்கள் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் அங்கு வருகின்றனர் மேலும் சட்டைகளில் பொத்தான்கள் வைத்துத் தருவது போராடும் விவசாயிகளின் கிழிந்த சல்வார் காமீஸை தைத்து தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேர் அவர்களது ஸ்டாலுக்கு வந்து செல்கின்றனர்.
சிங்குவில் இத்தகைய சேவைகள் பல வடிவங்களில் தாராளமாக கிடைக்கிறது - இவை அனைத்தும் போராடுபவர்களுக்கு எங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றது.
சேவை செய்பவர்களில் இர்ஷாத் (முழு பெயர் கிடைக்கவில்லை) சிங்கு எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டுலி தொழிற் பகுதியில் உள்ள டிடிஐ மாலுக்கு வெளியே உள்ள குறுகிய முக்கில் ஒரு சீக்கிய போராட்டக்காரருக்கு தலையில் தீவிரமாக மசாஜ் செய்கிறார். இன்னும் பலர் தங்களது முறைக்காக காத்திருக்கின்றனர். இர்ஷாத் குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்த ஒரு சிகை திருத்தும் கலைஞர் அவர் இங்கு சகோதரத்துவ உணர்வுக்காக வந்திருப்பதாக கூறுகிறார்.
மேலும் இந்த வழியில், தனது மினி டிரக்குக்கு வெளியே அமர்ந்திருக்கிறார் சர்தார் குர்மிக் சிங், பஞ்சாபிலிருந்து சிங்கு வரை வண்டிகளில் நெரிசலான நீண்ட நேர பயணத்திற்குப் பின் அவர்களது வலிக்கும் தசைகளை தளர்த்த இலவச மசாஜ் கோரி அவரைச் சுற்றி பலர் நின்று கொண்டிருக்கின்றனர். அவர் ஏன் இங்கு உதவ வந்திருக்கிறார் என்பது பற்றி கூறுகையில், "அவர்கள் இப்போது பல வகையான வலிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்", என்று தெரிவித்தார்.
சண்டிகரை சேர்ந்த மருத்துவரான சுரீந்தர் குமாரைப் பொருத்தவரை மற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து அவர் சிங்குவில் மருத்துவ முகாம் நடத்தி தனது சேவையை வழங்கி வருகிறார். போராட்டக் களத்தில் உள்ள பல மருத்துவ முகாம்களில் இதுவும் ஒன்றாகும் சில முகாம்களில் உள்ள மருத்துவர்கள் கொல்கத்தா அல்லது ஹைதராபாத் என்று தூர மாநிலங்களில் இருந்து கூட வந்திருக்கின்றனர். "பலர் திறந்த சாலைகளில் தங்கியிருக்கின்றனர் நாளுக்கு நாள் இந்த கடும் குளிரால் பாதிக்கப்படும் வயதானவர்களை கவனிப்பதன் மூலம் - பட்டம் பெறும் போது நாங்கள் எடுத்த உறுதிமொழியை கடைபிடிக்க முயற்சிக்கிறோம்", என்று சுரீந்தர் கூறுகிறார்.
















