“பெண்கள் எங்களுக்குச் சோறு போடுகிற காய்கறிகளை விளைவிக்கிறார்கள். ஆண்கள் அந்தக் காய்கறிகளை விற்பனை செய்வதைப் பார்த்து கொள்கிறார்கள்", என்கிறார் லக்ஷ்மிகாந்த் ரெட்டி.
அவர் சரளமாக, நம்பிக்கை மிக்கவராகத் தோன்றுகிறார். முக்கியமாக, தொழில்முனைவோராகவும் இருக்கிறார். லக்ஷ்மிகாந்த் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த அனுபவம் கைகொடுக்கிறது. தற்போது அவர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
லக்ஷ்மிகாந்த்தை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. அவருக்குப் பதினேழு வயது ஆகிறது. லக்ஷ்மிகாந்த்தும்,சக அமைச்சர்களும் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தை காண வந்திருக்கும் மக்களிடம் உரையாற்றுகிறார்கள்.
பல்வேறு ஆடம்பரமான பள்ளிகள் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையை நடத்துவது தெரிந்திருக்கிருக்கும். அவற்றைப் போல ஏட்டளவில் இல்லாமல், இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் ஆண்டிற்கு ஒரு முறையாவது கூடுவது கட்டாயம். இங்கே கச்சிதமான உடையில் அயலுறவு சிக்கல்கள் அலசப்படுவதில்லை. உலகத்தின் கொதிக்க வைக்கும் சிக்கல்களுக்கு, அசரவைக்கும் தீர்வுகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் கல்வி, உடல்நலம் ஆகியவை சார்ந்து பல்வேறு அமைச்சரவைகள் முடிவெடுக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு விதி கடைபிடிக்கப்படுகிறது. மூத்தவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியும்.
புது தில்லியின் மையப்பகுதியில் பகட்டான மாளிகைகளில் இந்த அமைச்சர்கள் வாழவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி வட்டத்தில் மலைகளுக்கு நடுவே இருக்கும் நாச்சிக்குப்பத்தில் அமைச்சர்கள் வாழ்கிறார்கள். இவர்களைப் போல மாதிரி நாடாளுமன்றங்கள் நடத்தும் பணக்கார பள்ளியின் மாணவர்களைப் போல, செய்திகளில் இவர்களின் பெயர்கள் இடம்பிடிப்பதே இல்லை.










