இந்நகர குழந்தைகள் என்ன அநாதைகளா?
1. நாள்காட்டியை பாருங்கள்,
ஆகஸ்ட் வரலாம், போகலாம்...
சிலருக்கு அவை கண்களில் கண்ணீரைப் போன்று ஓடுகிறது
சிலருக்கு நடுக்கும் கைகளில் உடைந்து விழுகிறது
மூச்சு திணறல் ஏற்பட்டு,
மூச்சை நிறுத்தி கொள்கிறது.
சிலருக்கு இது ஒரு கெட்ட கனவு,
சிலருக்கு இது ஒரு தூக்கு கயிறு,
கோரக்பூரின் அன்னைகளுக்கு
அது கருப்பையில் அச்சம் தருவது
அவர்களுக்கு ஆகஸ்ட் என்பது ஒரு நீண்ட வருடம்
உடனே முடியப் போவதில்லை.
2. அன்னைகளின் அச்சம் தவறானது, என்கின்றனர் அவர்கள்.
தந்தைகள் பொய்யர்கள், என்கின்றனர் அவர்கள்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என்கின்றனர்
இது முகலாயர்களின் சூழ்ச்சியாக இருந்திருக்கும்.
உண்மையில் ஆக்சிஜன் அதிகளவில் உள்ளது
ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு சந்திலும்
கோமாதா சுவாசித்து ஆக்சிஜனை வெளியேற்றுகிறார்.
உண்மையில் அது அதிகமாகித்தான் கொன்றுள்ளது.
அதிகம் என்பதே மூச்சு முட்டுகிறது.
3. இவை யாருடைய குழந்தைகள், யார் கைவிட்டது?
திறந்தவெளி சாக்கடைகளில்
கொசுக்களால் கடிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள்?
யாருடைய குழந்தைகள் இவர்கள்
கைகளில் புல்லாங்குழல் இல்லையே?
யாருடைய குழந்தைகள் இவர்கள்?
எந்த உலகிலிருந்து இவர்கள் வந்துள்ளனர்?
மற்ற உலகத்தினரால்
இவர்களின் துயரங்கள் ஏன் பேசப்படவில்லை?
யாருடைய வீட்டிலும் கிருஷ்ணர் அவதரிக்க மாட்டார்
இந்த நள்ளிரவில்
ஆனால் அவர் உலகத்தில் தடுமாறி விழுகிறார்.
அவர்கள் ஆக்சிஜன் கேட்கின்றனர்
மருத்துவமனையில் படுக்கையும் தான்?
என்ன விநோதம்!
4. கோரக் நிலமே சிதறப் போகிறது.
கபீர் துயரத்தில் இருக்கிறார்.
ரப்தியின் கரைகள் தீயால் சூழ்ந்துள்ளன.
பொய்கள் நிறைந்த நகரம்
அமைதியில் ஆழ்கிறது
மாநிலத்தின் மஹந்த் நம்புகிறார்
சிலைகளை பிரதிஷ்டை செய்ய கேட்கிறார்
இதற்கு குழந்தைகளின் இரத்தத்தை தியாகம் செய்யச் சொல்கிறார்



