பிரகலாத் சிங் திபானியா மற்றும் ஷப்னம் விர்மானி (கபீர் பணியை சேர்ந்தவர்கள்) கபீர் பஜனைகளை ஏக்தாரியுடன் பாடுகின்றனர்.
நாட்டின் பல இடங்களில், பஜனை பாடகர்கள், நாடோடிக் கலைஞர்கள் போன்றோருடன் ஏக்தாரி கருவி காணப்படுகிறது. 100-120 செமீ நீளம் கொண்ட ஏக்தாரிக்கு பல பெயர்கள் உண்டு. கர்நாடகாவில் ஏக்நாத்; பஞ்சாபில் டும்பி; வங்காளத்தில் பவுல்; நாகாலாந்தில் டட்டி. தெலெங்கானாவிலும் ஆந்திராவிலும் புர்ரா வீணா என அழைக்கப்படுகிறது. சட்டீஸ்கரின் பழங்குடிகள் ஏக்தாரியை அவர்களின் இசைக்கும் நடனத்துக்கும் பயன்படுத்துகின்றனர்.
காய்ந்த பூசணியின் தட்டையாக்கப்பட்டு வெட்டப்பட்ட பகுதிதான் ஏக்தாரியில் எதிரொலிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தோல் துண்டு, எதிரொலிப்பானின் வாயை மூடியிருக்கிறது. ஒரு குழிவான மூங்கில் கம்பு எதிரொலிப்பானுக்குள் செருகப்பட்டிருக்கிறது. எதிரொலிக்கும் பகுதியின் கீழ்ப்பகுதியில் கம்பி இணைக்கப்படுகிறது. அக்கம்பியின் மேலெழுப்பப்பட்டு மூங்கில் கம்பின் மறுமுனையில் கட்டப்பட்டிருக்கிறது. நடுவிரலாலோ ஆட்காட்டி விரலாலோ கம்பி மீட்டப்படுகிறது.
பிற கம்பி வாத்தியங்களை காட்டிலும் ஏக்தாரியின் வடிவமைப்பும் உருவாக்கமும் எளிமையானது. பூசணி, கட்டை, மூங்கில் மற்றும் கம்பி ஆகியவையும் எளிதாகக் கிடைக்கும். பூசணி நல்ல எதிரொலியை வழங்குவதாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்க இசைக்கருவிகளிலும் அது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஏக்தாரி அடிப்படையான ஒரு தாளத்தையும் இசையையும் கொடுக்கிறது. பாடகர் அவரது குரலையும் பாடலின் வேகத்தையும் ஒலிப்புக்கேற்ப சரிபடுத்திக் கொள்ளலாம். இது பழமையான பழங்குடி கருவி ஆகும். தொடக்கத்தில் கம்பியும் கூட தோலில் செய்யப்பட்டது. விலங்கின் அடித்தோல் பயன்படுத்தப்பட்டது. கர்நாடகாவில் தோல் கம்பிகளாலான ஏக்தாரி இன்னும் யல்லம்மா வழிபாட்டில் வாசிக்கப்படுகிறது. அது சும்புருக் என அழைக்கப்படுகிறது. எனவே முதல் இசையும் முதல் ராகமும், தோல் கம்பி ஒரு தோல் தட்டில் பட்டு எதிரொலித்து உருவானதென சொல்லிக் கொள்ளலாம். அங்கு அதுதான் முதல் இசைக்கருவி. விவசாய சமூகத்தில் உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலோகக் கம்பி பயன்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் பல ஒற்றை கம்பி வாத்தியங்கள் கண்டுபிடிக்கபட்டு வாசிக்கப்பட்டன. தெரு இசைஞர்களும் நாடோடிகளும் உருவாக்கி வாசித்த கருவிகள் அவர்களின் வாழ்க்கை முறையுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டது.
இந்தியாவின் பக்தி இயக்கத்தின்போது ஏக்தாரி, துறவிகளாலும் கவிஞர்களாலும் பரவலாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வரலாற்றின்படி பார்த்தால் இதில் முழு உண்மை இல்லை. கபீர், மிராபாய் மற்றும் சில சூஃபி துறவிகள் பாடுகையில் ஏக்தாரி பயன்படுத்தியதை பார்க்க முடிகிறது. ஆனால மகராஷ்டிராவில் நம்தேவ் தொடங்கி துகாராம் வரையிலான பல கவிபாடும் துறவிகள் தாள் (தட்டு போன்ற கருவி), சிப்லி (கட்டைகளில் உலோக தட்டுகள் கொண்டு தட்டும் இசைக்கருவி) மற்றும் மிருதங்கம் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர். பல ஓவியங்களிலும் படங்களிலும் துறவிகள் வீணைகள் வைத்திருப்பதையும் பார்க்கலாம்.
மராத்தி விஸ்வகோஷின்படி, “இந்திய இசையில் பயன்படுத்தப்பட்ட புராதன கருவி வீணை. வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது எண்ணுவதற்கு அது பயன்பட்டது.” நம்தேவ் மற்றும் துகாராம் போன்ற துறவிகளின் படங்களில் அவற்றை நாம் பார்த்தாலும் துகாராம் எழுதிய பஜனையில் அதைப் பற்றி ஒரு குறிப்பும் தென்படவில்லை. ஆனால் தாள், சிப்லி, மிருதங்கம் போன்ற பிற கருவிகள் பலவற்றின் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
வீணை வைத்திருக்கும் துகாராம் படத்தை பிராமணமயமாக்கலின் விளைவு என குறிப்பிடலாம்.