இரவு 9 மணியை தாண்டி விட்டது. அது ஜனவரி மாதத்தின் ஓரிரவு. கிட்டத்தட்ட 400 பேர் நிகழ்ச்சி தொடங்கக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும்.
திடீரென மேடைக்கு முன் சிறு சலசலப்பு. ஒரு மூங்கில் தட்டியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி அதிர்ந்து ஒரு குரல் வெளிவந்தது: “அம்மா போன்பீபிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாடகத்தை விரைவில் தொடங்குவோம். அவர் நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் காப்பார்!”
கொசாபா ஒன்றியத்தின் ஜவஹர் காலனியை சுற்றிக் கொண்டிருந்தவர்கள் வந்தடையத் தொடங்கினர். 18 அலைகளுக்கான நிலத்தை பேய்களும் பாம்புகளும் முதலைகளும் புலிகளும் தேனீக்களும் தாக்குவதை முறியடிக்கும் அம்மா போன்பீபியை பார்க்க வந்தனர். இங்கு வாய்மொழி வழியாக போன்பீபியின் கதைகள் தலைமுறைகள்தோறும் கடத்தப்படுகிறது.
திரைச்சீலைகள் கொண்டு தெருவிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அறைக்குள், பல கான இசை நாடகத்துக்காக பார்வையாளர்களும் நடிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவிருந்த பெரிய தேன்கூடுகளும் செம்மண் புலி முகமூடிகளும் தம் வாய்ப்புகளுக்காக தார்ப்பாய் சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டு காத்திருந்தன. நாடகத்தின் உள்ளடக்கங்கள் வழக்கமாக சுந்தரவன மக்களின் வாழ்க்கைகள் சார்ந்துதான் இருக்கும். 2020ம் ஆண்டு நிலவரப்படி அங்கு 96 புலிகள் இருந்தன.



































