பட்ஜெட்டை பெரிதாக சையது குர்ஷித் கவனிக்கவில்லை. “செய்தி தொலைக்காட்சி பார்க்க கூட நான் விரும்புவதில்லை,” என்கிறார் 72 வயதாகும் அவர். “அதில் வருவதில் எத்தனை உண்மை, எத்தனை கட்டுக்கதை என்பது எவருக்கும் தெரியாது.”
வரிகளுக்கான வருமான வரம்புகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறார். “ஆனால் எங்களின் பகுதியில் இருக்கும் எவருக்கும் அதனால் ஒரு பயனும் கிடையாது,” என்கிறார் அவர் சிரித்தபடி. “வேலை பார்த்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறது.”
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்திலுள்ள கங்காகெட் டவுனில் 60 வருடங்களாக சையது தையற்காரராக இருக்கிறார். தந்தையிடம் இருந்து இக்கலையை கற்கும்போது அவருக்கு எட்டு வயதுதான். ஆனால் அவரின் வேலை, முன்பு கொடுத்தளவுக்கு வருமானத்தை இப்போது கொடுப்பதில்லை. “இளம் தலைமுறையினர் ரெடிமேட் துணிகளைத்தான் விரும்புகின்றனர்,” என விளக்குகிறார்.




