நாராயண் குந்தாலிக் ஹஜாரே, பட்ஜெட் என்கிற வார்த்தையைப் புரிந்து கொள்கிறார். ஆனால் பெரிய அளவில் இல்லை.
“அந்த அளவுக்கு என்னிடம் பட்ஜெட் இல்லை!” என வெறும் நான்கு வார்த்தைகளில், 12 லட்ச ரூபாய் வருமானத்துக்கு வரி விலக்கு என்கிற அறிவிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறார்.
ஒன்றிய அரசு பட்ஜெட் பற்றிய கேள்வி, விவசாயியும் 65 வயது பழ வியாபாரியுமான இவரை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. முழு நம்பிக்கையுடன் அவர் பதில் சொல்கிறார். “இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை. இத்தனை வருடங்களிலும்.”
நாராயணுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “என்னிடம் செல்பேசி கிடையாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லை.” சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் ஒரு ரேடியோவை பரிசளித்திருக்கிறார். ஆனால் அதில் இன்னும் இந்த செய்தி வரவில்லை. “எங்களை போன்ற படிப்பறிவில்லாத மக்களுக்கு ஏதும் இதோடு தொடர்பு உண்டா?” என கேட்கிறார். ‘கிசான் கடன் அட்டை’ அல்லது ‘அதிகமாக்கப்பட்டிருக்கும் கடன் வரம்பு’ போன்ற விஷயங்கள் அவருக்கு அந்நியமாக இருக்கின்றன.



