கொல்கத்தாவிலிருந்து பேருந்து புறப்பட்டதும், குண்டும் குழியுமான சாலைகளின் இருபுறமும் மீன் வளர்ப்பு குளங்கள், நீர் தேக்க பாத்திகள், தள்ளுவண்டி டீக்கடைகள் போன்றவற்றை காணும்போது மிகப்பெரும் நீர்நிலை நெருங்குவதை உணரலாம். எங்கள் படகு பரந்த நீல விரிப்பில் சவாரி செய்யும்போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சுந்தரவனத்தில் உள்ள பாலி தீவை நெருங்கும்போது நகர இரைச்சலை மறந்து 'மகிழ்ச்சியில் மூழ்குவது' எளிது.
இத்தீவில் வசிக்கும் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையால் புலிகள், மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடுதல், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தீவிற்கு அண்மையில் சென்றபோது எடுத்த புகைப்படங்கள்







