தற்காலிக மேடை மீது ஏறிய அந்த இளைஞர், 19 வயது இளம்பெண் முஸ்கான் கையைப் பிடித்தார். “இப்போ உன்னை சுட்டால் நீ ஆடத் தொடங்குவாய்,” என்றார் அந்த இளைஞர்.
பார்வையாளர்களில் இருந்து வந்து அப்படி மிரட்டிய இளைஞனை ஊக்குவித்து குரல் எழுப்பியது கூட்டம். பிகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் நடந்த அந்த நிகழ்வில், சுமார் ஆயிரம் ஆண்கள் கூடியிருந்தார்கள். எல்லோரும் கேலியும், கிண்டலுமாக இருந்தார்கள். அவர்கள் கேட்ட ஒரு ஆபாசமான போஜ்புரி பாடலுக்கு நடனமாட மறுத்தார் அந்தப் பெண். அதற்காகத்தான் அவர் மிரட்டப்படுகிறார்.
ருனாலி ஆர்க்கெஸ்ட்ரா என்ற ஆடல்-பாடல் குழுவில் இடம் பெற்றுள்ள ஏழு நடனக் கலைஞர்களில் ஒருவர் முஸ்கான். சிரையா வட்டாரத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“நடனக் கலைஞர்களுக்கு இது மாதிரி மிரட்டல்கள் வருவது பொதுவானது,” என்று கூறும் சாதாரண்ம்," எனும் முஸ்கான் இது மாதிரி ஆடல் – பாடல் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்வுகளில் தற்போது மூன்றாண்டுகளாக பங்கேற்று வருகிறார்.
ஆனால், மிரட்டல்களைத் தொடர்ந்து பாலியல்ரீதியில் நெருங்கவும் செய்வார்கள். “இடுப்பிலே கை வைப்பார்கள், இல்லாவிட்டால் ரவிக்கைக்குள் கை நுழைக்க முயற்சி செய்வார்கள். இதெல்லாம் இங்கே ஆண்களுக்கு தினசரி செய்யும் வேலை,” என்கிறார் இன்னொரு நடனக் கலைஞர் ராதா.













