பிஸ்டாவின் கூற்றுகள் இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு உதவுவதற்கான அரசின் முயற்சிகள் பெரும்பாலும் ஏட்டில் மட்டுமே உள்ளன.
"அரசின் கொள்கைப்படி, தகுதியான ஒவ்வொரு விவசாயிக்கும் நிர்வாகம் போதுமான இழப்பீட்டை விநியோகித்துள்ளது. சில மாவட்டங்களில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இழப்பீட்டுக் கொள்கையிலேயே பிரச்சினை இருந்தால் என்ன செய்வது?
பயிர் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டுவிட்டதால், வெற்று வயல்களில் இருந்து சேதத்தை கணக்கிட முடியாது. மழைப் பொழிவு மற்றும் நெல் பயிர் விற்பனையின் அடிப்படையில் இழப்பை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மாநில வேளாண்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் கூறுகையில், "இழப்பீட்டுத் தொகையை விநியோகிக்கும் பணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. புகார்கள், எழுவது இயல்பு தான். ஆனால் விவசாயிகள் மத்தியில் பரவலான கோபம் இருப்பதாக கூறுவது தவறு.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளரும், வேளாண் நிபுணருமான சங்கேத் தாக்கூர் இந்த கூற்றை மறுக்கிறார்.
"விவசாயிகளுக்கு உதவுவது போல் அரசு பாசாங்கு செய்கிறது. அது அதிகார வர்க்கத்தின் கைக்கு சென்றுவிட்டது. முதலில் நிவாரணப் பணம் போதுமானதாக இல்லை. விநியோகத்திலும் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன," என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
"நிலைமை சீராகவில்லை என்றால் மேலும் பல விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு MNREGA மட்டும் போதும் என்று கூறி விடமுடியாது," என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கட்டுரை முதன்முதலில் ராஜஸ்தான் பத்திரிகாவின் ராய்ப்பூர் பதிப்பில் 2016, பிப்ரவரி 29, அன்று வெளியிடப்பட்டது.
தமிழில்: சவிதா