“கிட்டத்தட்ட 450 பறவைகளின் சத்தங்கள் எனக்குத் தெரியும்.”
மிகா ராயின் முக்கியமான திறன் அது. ஒரு வன புகைப்படக் கலைஞராக அரிய பறவைகளையும் விலங்குகளையும் படம் பிடிப்பது பெரும் காத்திருப்பு இருக்கும் வேலை. சத்தத்தை கண்டறிய முடிந்தால் மொத்தமுமே கைவசப்படும்.
சிறகு கொண்ட உயிரினங்கள் தொடங்கி ரோமம் கொண்ட பாலூட்டிகள் வரை, மிகா 300 வகை உயிர்களை இதுவரை படம் பிடித்திருக்கிறார். மிக அரிதாக கண்ணில் படும் திரகோபன் கோழியை (Tragopan blythii) பற்றி நினைவுகூருகிறார்.
அக்டோபர் 2020-ல் மிகா ஒரு சிக்மா 150 மிமீ-600 மிமீ டெலிஃபோடோ சூம் லென்ஸ் வாங்கியிருந்தார். அதில் திரகோபன் கோழியை படம் பிடித்துவிட வேண்டுமென அவர் தீர்மானித்திருந்தார். கோழியின் அழைப்புகளை தொடர்ந்து விடா முயற்சியுடன் சென்றார். “பல மாதங்களாக தொடர்ந்தும் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.”
இறுதியாக மே 2021-ல் மீண்டும் மிகா, திரகோபன் கோழியின் சத்தங்களை கேட்டு அருணாச்சல பிரதேசத்தின் ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்தின் அடர் காடுகளில் அலைந்தார். அங்குதான் கோழி கண்ணில் பட்டது. நிகான் D7200-டன் சிக்மா 150 மிமீ-600 மிமீ டெலிபோட்டோ லென்ஸுடன் சரியான இடத்தில் இருந்தார். ஆனால் அவர் பதற்றம் குலைத்து விட்டது. “மங்கலான புகைப்படம்தான் கிடைத்தது. அதில் பயனில்லை,” என நினைவுகூருகிறார்.
இரு வருடங்கள் கழித்து, மேற்கு காமெங்கின் போம்பு முகாம் அருகே, அந்த மாயப் பறவையின் பளீர் சிவப்பு நிறம், சற்று இலைகளில் மறைந்து தெரிந்தது. இம்முறை மிகா தவறவிடவில்லை. 30-40 பதிவுகளில் அவர் 1-2 நல்ல புகைப்படங்கள் பெற்றார். முதன்முறையாக அது பாரியில் பதிப்பிக்கப்பட்டது. சுரங்கத்தில் கேனரி பறவை




















