ஜெயபாலின் இரண்டு அறை கொண்ட செங்கல் மற்றும் தகரக்கூரை கொண்ட வீட்டிற்கு மற்ற பல அலங்கார பங்களாக்கள், அதில் பல மாடிகள், பால்கனிகள், கோபுரங்கள், மாடங்கள் உள்ளன.
அவையனைத்தும் பேப்பர் மற்றும் பசை கொண்டு தயாரிக்கப்பட்டவை.
கடந்த 4-5 ஆண்டுகளாக, ஜெயபால் சவுகான் (19), அவரது சில காலை மற்றும் மதியங்களை இதுபோன்ற பேப்பர் வீடுகளை செய்வதில் செலிவிடுகிறார். அவரது வீடு மத்திய பிரதேச மாநிலம் கன்வா மாவட்டத்தில் உள்ள கரோலி என்ற கிராமத்தில் உள்ளது. அவர் பொறுமையாக பேப்பர்களை சுருட்டி, அவற்றை ஒவ்வொன்றாக வைத்து அடுக்கி, சுவர்போன்ற அமைப்பை உருவாக்கி, பின்னர் அவற்றை பசை வைத்து ஒட்டி கோட்டை போன்ற அமைப்புகளை உருவாக்குகிறார்.
“எனக்கு கட்டிடங்கள் மீதும், அவை எவ்வாறு கட்டப்படுகின்றன என்பதன் மீதும் ஆர்வம் உள்ளது“ என்று அவர் கூறுகிறார்.
ஜெயபால் தனது 13 வயது முதல் அட்டைகள் வைத்து கோயில் போன்ற மாதிரிகளை உருவாக்கி வருகிறார். அவர் மற்றொரு கிராமத்தில் ஒரு திருமண நிகழ்விற்கு சென்றிருந்தபோது, ஒருவரின் வீட்டில் சிறிய கண்ணாடி கோயிலை பார்த்தார். அது அவருக்கு அட்டையை வைத்து அதுபோன்ற உருவங்களை உருவாக்கும் ஆர்வத்தை தூண்டியது. அவர் அதுபோல் சிலவற்றை செய்து, உறவினர்களுக்கு பரிசளித்தார். 2017ல் பள்ளியில் நடந்த கண்காட்சியில் அவர் வடித்த ஒரு மாதிரிக்கு பரிசும் பெற்றார்.
அட்டையில் உருவாக்கிய பைக்குக்கும் பள்ளியில் பரிசு பெற்றுள்ளார். அவர் இதுபோல் டேபிள் பேன், கார் மற்றும் கிரேன் ஆகியவற்றையும், பொம்மைகளிலிருந்து எடுத்த சக்கரத்தை வைத்து செய்துள்ளார்.









