லாத்தூர் நகரில் தனது பள்ளி மூடப்பட்டதற்கு பராஸ் மடிகர், 11 வயது சிறுவர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ அப்படியே உணர்ந்தார். தனது 4 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைந்து, விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அது நடக்கவில்லை. 45 வயதானஅவனின் தந்தை ஸ்ரீகாந்துக்கு ஓட்டுநர் வேலை பறிப்போனது. அவரது கடைசி வருமானத்தை விட மூன்றில் இரண்டு பங்கு குறைவான ஊதியம் பெறக்கூடிய ஒரே ஒரு வேலையை எடுத்து செய்ய வேண்டியிருந்தது. 35 வயதாகும் அவனின் தாயார் சரிதாவுக்கும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், தான் செய்துக்கொண்டிருந்த சமையல்காரர் வேலையை இழந்தார்.
ஒரு நாளின் முதல் பகுதியில் கீரை வகைகளைச் சார்ந்த காய்கறிகளைத் தலையில் சுமந்துகொண்டு விற்கிறார். இதற்கு முரணாக, ஏழை மாணவர் செல்லும் பகுதிகளுக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி காலனிகள் (அறிவு மற்றும் செல்வத்திற்கு பெயர் பெற்ற தெய்வங்களின் பெயர்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அவரின் சகோதரி, 12 வயதான ஸ்ருஷ்டி, ராம் நகர் மற்றும் சீதாராம் நகர் காலனிகளை உள்ளடக்கியது, அங்கு காய்கறிகளை விற்பனை செய்கிறார்.
“எனக்கு ஒவ்வொரு மாலையும் எவ்வளவு பயங்கரமாக கழுத்து வலிக்கும் என்று சொல்ல முடியாது! நான் வீட்டுக்கு வந்ததும் என் அம்மா ஒரு வெதுவெதுப்பான துணியில் எண்ணெய் மசாஜ் தருவார். அதனால், அடுத்த நாள் காலை நான் மீண்டும் பொருள்களைச் சுமக்க முடியும், ”என்று சிறுவன் பராஸ் முணுமுணுக்கிறார். ஸ்ருஷ்டியின் பிரச்சனையோ வேறு: “நண்பகலில் என் வயிறு மிகவும் மோசமாக வலிக்கிறது,” என்று கூறுகிறார். "மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பு நான் எலுமிச்சைப் பழச்சாறு குடிக்கிறேன் - அது எனக்கு கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது." இந்த இரண்டு குழந்தைகளும் இதற்குமுன் எந்த உடல் சார்ந்த வேலையும் செய்ததில்லை. இப்போது அவர்கள் மிக மோசமான சூழ்நிலைகளில் வெளியே இருக்கிறார்கள், கொஞ்சம் ரொட்டி வாங்குவதற்கான பணத்தை ஈட்டுவதற்காக! அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்கக்கூட முடியாது.



