சிறந்த பண்பாடுடைய ஒரு சிறு நகரம் அது. தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் நகரம், 17-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட ஆட்சியாளரான நிம்ம நாயுடுவின் பெயரை தனதாக்கிக் கொண்டது. நிம்ம நாயுடுவுக்கு கலையிலும், பொம்மைகளை செய்யும் கலையிலும் ஆர்வம் அதிகம். அந்தக் காலத்தில், 80 கலைஞர்களை அவரின் நகரத்துக்கு பொம்மை செய்யும் கலையை சிறப்பாக்குவதற்காகவே அழைத்து வந்திருக்கிறார்.
இன்று, அதிலாபாத்துக்கு செல்பவர்களும், அதற்கு அருகில் இருக்கும் குண்டலா நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்களும் மறக்காமல் இறங்கி பொம்மைகள் வாங்கிச்செல்லும் இடமாக இருக்கிறது நிர்மல் நகர்ப்பகுதி. ஆனால் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம் உள்ளது. ஒரு லட்சத்துக்குக் குறைவான நபர்கள் வாழும் நிர்மல் நகரில், மென்மரங்களை வைத்து செய்யும் பொம்மைக் கலையை 40 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகிறது.
நிர்மல் நகர் பொம்மைக் கலைஞர்களின் சிறப்பே அவர்களது தயாரிப்புகளின் சிறப்பம்சமாக பூக்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் வைத்திருக்கிறார்கள். மரங்களைப் பயன்படுத்துவதோடு, விலங்கு பொம்மைகளோ, பழங்களின் பொம்மைகளோ அவற்றின் வடிவத்தையும், அளவையும் மிகக் கச்சிதமான ஆய்ந்து அதை அப்படியே வடிக்கிறார்கள்.







