அங்கு ஒரு யானை இருந்தது. அதன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அந்த மனிதனையும், யானையையும் பார்த்த போது நாங்கள் சர்குஜா-பலமு எல்லையின் வெறிச்சோடியச் சாலைப் பகுதியில் நடந்துக்கொண்டிருந்தோம். அப்போது, குறைந்தபட்சம் நாங்கள் அதனை நெருங்கிவிட்டதாக எண்ணினோம். நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் கேட்டு அதனை உறுதியும் படுத்திக்கொண்டோம். எனினும், வேகமாக அருகில் சென்று பார்ப்பதற்கு எங்களுக்கு தோன்றவில்லை. அதுகுறித்து எந்த தவறும் இல்லை.
ஆனாலும், இதுகுறித்து தலிப்குமார் எரிச்சல்பட்டார். அவர் எங்களை சந்திப்பதற்காக சந்த்வா பகுதியிலிருந்து வந்திருந்தார். அவர் எங்களது அணுகுமுறை அபத்தமாக இருந்ததாக சுட்டிக்காட்டினார். ”ஒருவேளை இதே காட்சியை நாங்கள் பாட்னாவிலோ ராஞ்சியிலோ அல்லது வேறு நகர்ப்புறத்திலோ பார்த்திருந்தால் இதனை நாங்கள் வழக்கமான ஒன்றாக எண்ணி இருக்க மாட்டோம். ஆனால், இது காடு, யானைகளுக்கு சொந்தமானது. அதுமட்டுமல்லாது நாங்கள் முட்டாள்களாக இருந்தோம்”.
இது காடு என்பதாலோ என்னவோ நாங்கள் முட்டாள்களாக இருந்திருக்கக்கூடும். தலிப் முழுமையாக தர்க்கரீதியாக நடந்துகொண்டிருந்தார். எனினும்,தர்க்கப்பூர்வமாக பேசியதை நடைமுறைப்படுத்துவது என்று வரும்போது, அவருக்கும் ஆர்வம் குறைவாக இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார். இதேவேளையில் உண்மையிலேயே அந்த மனிதனை யானை மீது பார்த்தோமா என்று எங்களால் உறுதியாகக் கூற இயலவில்லை.
அந்த சமயம், அந்த மனிதர் எங்களைப் பார்த்து விட்டார். உற்சாகமாக கையசைத்தபடி, அவரது பெரும் வாகனத்தை நாங்கள் இருந்த திசை நோக்கித் திருப்பினார். அவளது பெயர் பார்பதி. நீங்கள் எங்கும் அணுகக்கூடிய அளவுக்கு அவள் மென்மையானவள். அவரது பெயர் பர்பு* என்பது அவருக்கு பொருந்தக்கூடியதாக இருந்தது. அவர் அவளை இதுவரை நாங்கள் கேள்விப்படாத ஏதோவொரு கோவில் உள்ள பகுதிக்கு கூட்டிச்சென்றுக் கொண்டிருக்கிறார். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று முடித்துவிட்டதாக அதுகுறித்து அவர் விளக்கிக் கூறினார். இதன்வழியாக குறைந்தளவிலானத் தொகை ஈட்டிவந்ததாகவும், திருவிழாவென்றால் மேலும் கூடுதலாகவும் ஈட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாது,அவர்கள் செல்லக்கூடிய வழியில் இருக்கும் கிராமத்தைச் சார்ந்த நல்லவர்களும் அவர்களுக்கு கொஞ்சம் பணமும் உணவும் கொடுத்துள்ளனர்.
பர்பு மத்தியபிரதேச மாநிலம் சர்குஜா பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் அவரும் பார்பதியும் பலமுவிலிருந்து எல்லையின் இரண்டு பக்கமும் சென்று வருகின்றனர். அவர் உள்ள சர்குஜா மாவட்டம் டெல்லி,கோவா, நாகலாந்து ஆகியப்பகுதிகளின் ஒட்டுமொத்தப்பரப்பை விட பெரியதாகும். பலமு** பீகார் மாநிலத்தில் உள்ளது. பலமு மற்றும் சர்குஜா ஆகிய இரண்டும் நாட்டிலுள்ள ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக அதிகளவிலான ஏழ்மை நிலையிலுள்ள மக்களையும் கொண்டுள்ளது. எனினும், இரண்டு மாநிலங்களும் பெருமைப்படத்தக்க அளவில் வளத்தினைக் கொண்டுள்ளது.





