இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாண்டி வெங்கையா எனும் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெனுகோலானு கிராமத்திலுள்ள தனது வயலில் இறந்து கிடந்துள்ளார். அவர் தனியாகக் கிடந்துள்ளார். அவரின் குடும்பம் வீட்டில் இருந்தது. காலை 9 மணியளவில் சில விவசாயிகள் பாண்டி வெங்கையா இறந்து கிடந்துள்ளதைப் பார்த்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு பருவச் சாகுபடிக்காக வெங்கையா ரூ.10 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து அவரின் கடன் வட்டியுடன் ரூ.17 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர் ஒரு ஏக்கர் நிலத்தில் சொந்தமாக பயிரிட்டுக் கொண்டு எஞ்சியுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு ரூ.30,000 என ஆண்டுக் குத்தகைக்கு விட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு ஏக்கரில் மட்டும் அவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மிளகாய்ப் பயிரை அறுவடை செய்துள்ளார். எஞ்சிய நான்கு ஏக்கரில் பருத்தியை அறுவடை செய்துள்ளார். அவர் 10 லட்ச ரூபாயை விவசாயப் பயிர்களுக்காக முதலீடு செய்ததாக அவரது மனைவி சீதா (35) தெரிவித்தார். தனியார் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து சிறிது தொகையும், சீதாவின் தங்க நகைகளை அடமானம் வைத்து சிறிது தொகையையும் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கம்பாலகுடம் மண்டலத்தைச் சேர்ந்த பெனுகோலானு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய்ப் பயிர் மகசூல் இன்று நலிவடைந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகக் கோப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. பயிரிட்டவர்கள் அனைவரும் மிளகாய்ப் பயிருக்கான விதைகளை அருகிலுள்ள நர்சரித் தோட்டத்தில் பெற்றுள்ளனர். ''162 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய்ப் பயிர்கள் பொய்த்தது. அதில் செலவிட்ட முதலீடு மற்றும் வேலையாட்கள் கூலி அனைத்தும் நஷ்டமடைந்து விட்டது'' என 26 வயதான வத்தேராபு திருப்பதி ராவ் தெரிவிக்கிறார்.










