முன்பே பவார் தனது பருத்தியை விற்கவில்லை. காரணம், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே சென்றுவிட்டது குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் என்ற நிலைக்கு கீழே. பின்னர் பிப்ரவரி இன் பிற்பகுதியில் அவர் 40 முதல் 50 குவிண்டால் பருத்தியை குவிண்டால் ஒன்றுக்கு 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார், தொழிலாளர்களுக்கான ஊதியத்தை கொடுப்பதற்காக.
ஏப்ரல் மாதத்தில் தேவை அதிகரிக்கும் என்று எண்ணி மீதியை நிறுத்தி வைத்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்கு என்னவென்றால் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பருத்தியின் விலை குறைந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் அதிகரிக்கும்.
ஆனால் மார்ச் மாதத்தில் வந்தது என்னவோ ஊரடங்கு தான்.
இப்போது உருவாகியுள்ள கோவிட்-19 நெருக்கடி மோசமடைந்து, ஊரடங்கு அதன் மூன்றாவது மாதத்தில் இருப்பதால் இதனை வாங்குவதற்கு யாரும் இல்லை, அதனால் விவசாய விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா முழுவதிலுமிருந்து, சொல்லப்போனால் நாடு முழுவதிலும் இருந்து எண்ணற்ற விவசாயிகளில், விற்கப்படாத பருத்தியுடன் இருக்கும் விவசாயிகளில் பவாரும் ஒருவர். (அவர்களிடம் ராபி பருவத்திற்கான விளைச்சலும் குறிப்பாக பணப்பயிர்கள் தேங்கிக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
மத்திய அரசின் இந்த துறைக்கான உச்ச சந்தைப்படுத்துதல் அமைப்பான இந்தியன் காட்டன் கார்ப்பரேஷன் (சிசிஐ) மற்றும் மாநில அளவிலான குழுக்கள் மகராஷ்டிராவில் சுமார் 150 கொள்முதல் மையங்களை திறந்து வைத்துள்ளன. இருப்பினும் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்னால் ஆன்லைன் பதிவுகள் மற்றும் நீண்ட மின் வரிசைகளுக்கு உட்பட வேண்டியிருப்பதால் பவார் போன்ற விற்பனையாளர்களின் பொறுமையை அது மிகவும் சோதிக்கிறது.
இதுவரை சிசிஐ, இந்தியா முழுவதிலும் 93 லட்சம் பேல் பருத்தியை (சுமார் 465 லட்சம் குவிண்டால் கொள்முதல் செய்துள்ளது) இதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 90 லட்சம் பேல்களை கொள்முதல் செய்ததே அதன் அதிகபட்ச கொள்முதல். கடந்த தசாப்தத்தில் தேசிய அளவில் அதன் சராசரி ஆண்டு கொள்முதல் செய்ததை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு இது அதிகம். மார்ச் பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் தனியார் வர்த்தகர்கள் யாரும் மார்ச் நடுப்பகுதிக்கு பிறகு பருத்தி வாங்குவதை நிறுத்தி விட்டனர் எனவே அது இவ்வாறு தலையிட வேண்டியதாகிவிட்டது.
மேலும் கோவிட் 19 அதற்கு முந்தைய விலையான குவிண்டால் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வர்த்தகர்கள் விலை கொடுத்தனர் ஆனால் சிசிஐ குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்கின்றது. இப்போது வர்த்தகர்கள் பருத்தி கொள்முதலையே நிறுத்திவிட்டனர். இதற்கிடையில் சிசிஐ மற்றும் மாநில அரசு தங்களது பலவீனமான நிலையை மேலும் திணற வைக்க தயங்கி மேலும் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டன.