தொடர் மண் அரிப்பு மற்றும் மூழ்குவதற்கு வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது போன்ற காரணங்களால் பிரமபுத்திரா நதியில் உள்ள தீவுகளில் இருந்து தினமும் காலையில் நாட்டு படகுகள் ஏராளமான தினக்கூலித்தொழிலாளர்களை அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள துப்ரி நகருக்கு கொண்டு வந்துவிடுகின்றன. அண்டை மாநிலமான மேகாலயாவிலிருந்து இங்கு, கடாதர் துணை நதியும், துப்ரியில் பிரம்மபுத்திராவும் சந்திக்கும் இடத்திற்கு மூங்கில்களையே மிதவை படகுபோல் தயாரித்து அதிலும் பயணிகள் மற்றும் வேலைக்கு வருபவர்கள் வருகிறார்கள்.
இந்த சந்திப்பில் வாழ்வாதார பிரச்னை வளர்ந்துவரும் ஒன்றாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பிளக்கப்பட்ட மூங்கில்களுக்கான தேவை குறைந்து வருகிறது. மூங்கில்கள், வேலிகள், பலகைகள், மூங்கில் சுவர்கள் மற்றும் மரஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்பயன்படுகின்றன. இந்த தீவுகள் மற்றும் அசாமின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் பாரம்பரியமான மூங்கில் வீடுகளில் இருந்து, மடித்து வைத்துக்கொள்ளகூடிய வகையிலான, தகர சுவர்கள் மற்றும் தகரக்கூரைகள் கொண்ட வீடுகளுக்கு மாறிவிட்டார்கள். தொடர்ந்து ஏற்படும் மண்அரிப்பு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்னைகளை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்கின்றனர். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலும் பிளக்கப்பட்ட மூங்கில்களுக்காக தேவை குறைந்து வருகிறது. அங்கும் கற்கள் அல்லது தகரங்கள் கொண்டு குறைந்த செலவில் வீடுகளை மூங்கில் வீடுகளுக்கு மாற்றாக கட்டிக்கொள்கிறார்கள்.











