தேசிய நெடுஞ்சாலை 30ல் நீங்கள் சட்டிஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து பாஸ்டர் மாவட்ட தலைநகர் ஜக்தல்பூருக்கு செல்லும் வழியில், கான்கெர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ச்சர்மா. அதற்கு முன்னர், ஒரு மலைக்கணவாய் உள்ளது. சில வாரங்களுக்கு முன், அங்கு காரில் சென்றபோது, 10 முதல் 15 கிராமத்தினரை பார்த்தேன். அதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் அருகில் உள்ள காடுகளிலிருந்து விறகுகளை சேகரித்து தலையில் சுமந்து வந்தார்கள்.
அந்த நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்தப்பெண்கள். அவை கான்கெர் மாவட்டத்தில் உள்ள கொச்வாஹி மற்றும் பாலோட் மாவட்டத்தில் உள்ள மாச்சந்தூர் ஆகும். அதில் பெரும்பாலானோர் கோண்ட் பழங்குடிகள். அவர்கள் வேளாண் கூலித்தொழிலாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் உள்ளனர்.





