அவர்கள் அங்கு செல்ல கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர், இப்போது தினசரி கூலி வேலைக்கு முதலாளிகள் அவர்களை தேர்வு செய்வதற்கு காத்திருக்கின்றனர். நிச்சயமற்றதன்மை இந்தத் தொழிலாளர்களை பிணைக்கிறது. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி மற்றும் கதிரி ஆகிய இடங்களில் இரு ரயில்கள் மாறி அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கின்றனர். எங்களது கிராமங்களில் வறட்சி வேலைகள் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்) எதுவும் இல்லை மேலும் நாங்கள் பல வாரங்களாக செய்த வேலைகளுக்கே எங்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று பல விவசாயிகள் என்னிடம் கூறினர். எந்த வேலையாக இருந்தாலும் உண்மையான தேவையில் கடந்த ஆண்டு பத்தில் ஒரு பங்காக அது குறைந்துவிட்டது.
எனவே ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குந்தக்கல் பயணிகள் ரயிலில் ஏறி கொச்சியை வந்தடைகின்றனர். "கொச்சிக்கு வரும்போது யாரும் டிக்கெட் எடுப்பதில்லை. திரும்பிச் செல்லும் போது பாதிப்பேர் டிக்கெட் எடுத்துக் கொள்கின்றனர் மீதி பாதி பேர் டிக்கெட் எடுப்பதில்லை", என்று அனந்தபூரின் முடிகுபா மண்டலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சீனிவாசலு கூறுகிறார்.














