“நான்.. நான்…”. பிறருக்கு முன் பதிலளித்து விட வேண்டுமென அமன் முகமது ஆர்வமாக இருந்தார். 12-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் இருந்த குழுவிடம் இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் பந்தல் குழுத் தலைவர் யாரெனக் கேட்டேன். “அவரே 2,000 ரூபாய் பணத்தை திரட்டி விட்டார்,” என்கிறார் குழுவிலேயே மூத்தவரான டி.ராகினி. எனவே அமனின் கோரிக்கையை யாரும் எதிர்க்கவில்லை.
அவர் திரட்டியதுதான் இந்த வருடத்தில் அதிகம். பந்தல் குழு திரட்டிய 3,000 ரூபாயின் மூன்றில் இரண்டு பங்கு அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆந்திராவின் அனதப்பூர் டவுனிலுள்ள சாய்நகர் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளிடமிருந்து அவர்கள் நிதி திரட்டியிருக்கின்றனர்.
தனது விருப்பமான விழா இது என அமன் கூறினார். எனக்கு வியப்பில்லை.
2018ம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி சாய் நகரில் முடிந்த சில வாரங்களுக்கு பிறகான ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று நான்கு குழந்தைகள் ‘போலச் செய்தல்’ விளையாட்டு விளையாடுவதை நான் பார்த்தேன். புகைப்படங்கள் எடுத்தேன். சிறுவன் பிள்ளையாராக நடிப்பார். இரண்டு குழந்தைகள் அவரை தூக்கிச் சென்று, பிள்ளையார் சிலையைக் கடலில் கரைக்கும் நிகழ்வாக, இறுதியில் தரையில் போடுவார்கள்.
சிறு பிள்ளையாராக நடிப்பவர் அமன் முகமது. 11 பேரில் முன் வரிசையில் (இடது ஓரம்) முகப்புப் படத்தில் நிற்பவர்தான் அவர்.
இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாத விநாயகர் சதுர்த்தி விழாவுக்கென அமனும் அவரது நண்பர்களும் 2x2 அடி பந்தல் போட்டு பிள்ளையார் சிலை வைத்திருந்தனர். அனந்தப்பூரிலேயே சிறிய சிலை அதுவாகத்தான் இருக்கும். புகைப்படம் எடுப்பதற்கு முன் பந்தலைப் பிரித்துவிட்டார்கள். சிலையை 1,000 ரூபாய்க்கு வாங்கியதாக குழந்தைகள் கூறினர். மீதி 2,000 ரூபாய் அந்தக் குடிலுக்கும் அலங்காரத்துக்கும் செலவானது. அந்தப் பந்தல் சாய்நகரின் மூன்றாவது குறுக்குத் தெருவுக்கருகே இருக்கும் தர்காவுக்கு அடுத்து அமைந்திருக்கிறது







