மூன்று சில் கற்கள் மற்றும் மரக்கட்டை ஆகியவற்றின் மீது அவர் ஒய்யாரமாக நிமிர்ந்து நின்றார். கற்கள் கரடு முரடாகவும் சீரற்றதாகவும் இருந்தது. அந்த மரக்கட்டை தான் அவருக்கு தட்டையான மேற்பரப்பை வழங்கியது. மகாராஷ்டிராவின் யாவத்மல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு தொட்டியில் இருந்து குழாய் மூலம் வெளியேறும் தண்ணீரை தன்னால் முடிந்தவரை பிடிக்க முயற்சிக்கிறார். வியக்கவைக்கும் பொறுமையுடனும் சமநிலையுடனும் அவர் தன் தலைக்கு மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீரை பிடித்து பின்னர் தரையில் இருக்கும் ஒரு பெரிய பாத்திரத்தில் அதை நிரப்புகிறார். அவை இரண்டும் நிரம்பியதும் அவர் தன் வீட்டிற்கு நடந்து சென்று தண்ணீரை சேமித்து வைத்து விட்டு மீண்டும் தண்ணீர் பெருவதற்காக திரும்பி வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் கிட்டத்தட்ட 15 முதல் 20 லிட்டர் தண்ணீரை இரண்டு உலோக பாத்திரத்திலும் எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார்.
அதே மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் சாரதா பத்ரே மற்றும் அவரது மகள்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஆரஞ்சு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கான நீர் ஆதாரம் 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. கிராமப்புற அளவைகளின் படி பார்த்தால் அது அருகில் உள்ள இடம் தான். ஆனால் இந்த மரங்களுக்கு 214 பெரிய குடங்களில் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். போவதற்கும் வருவதற்கும் சேர்த்து கிட்டத்தட்ட 428 முறை பாதி நேரத்தில் முழு குடத்தையும் தலையில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அல்லது மூன்று பெண்களும் ஒவ்வொருவரும் 40 கிலோமீட்டர் நடக்க வேண்டியுள்ளது. அவர்கள் "பாதி மரங்களுக்கு திங்கள்கிழமைகளிலும் மீதி மரங்களுக்கு வியாழக்கிழமைகளிலும் தண்ணீர் விட்டு வருகின்றனர்". ஏப்ரல், மே மாதங்களில் 45 டிகிரி செல்சியஸ் தொடக்கூடிய வெப்பநிலையிலும் வயல்களில் அவர்களை பிற வேலைகளை பார்ப்பதோடு சேர்த்து இதையும் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால் இது சிறிது காலத்திற்கு முன்பு. கிராமப்புற நீர் நெருக்கடி மேலும் அதிகமாகையில் பல ஆதாரங்கள் வறண்டு போவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான தண்ணீர் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதால் பத்ரே மற்றும் அவரது மகள்களை போன்ற இலட்சக்கணக்கான இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் இன்னும் அதிக தொலைவிற்கு நடக்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றனர். ஏழை கிராமப்புற பெண்கள் இதை எல்லா நேரத்திலும் செய்து வருகின்றனர் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும்.






