ஆனால், அவற்றுடன் கால்நடைகளை மேய்ப்பவர்களும் செல்கின்றனர். அதனால் தகுந்த வழிகாட்டுதலுடன் இந்தப் பயணம் நடக்கிறது. ஒவ்வோர் ஆண்டு ஒடிசாவின் ஜகத்சிங்புர் மாவட்ட கால்நடை விவசாயிகள் தங்களின் வளர்ப்பு எருமைகளை தேவி ஆற்றின் குறுக்கே நீந்தச் செய்து அழைத்துச் செல்கின்றனர். ஆற்றின் மறுபுறம் இருக்க மேய்ச்சல் நிலத்தை நோக்கி கோடை காலத்தில் இந்தப் பயணம் நடக்கிறது. மேய்ச்சலுக்குப் பின் அவை கரைக்குத் திரும்புகின்றன. செரிங்கிட்டி தேசியப் பூங்காவில் நடக்கும் இடம்பெயர்தல் போன்றது அல்ல இது. ஆனால், இதைப் பார்ப்பதும் காணக்கிடைக்காத காட்சியாக இருக்கும்.
இந்த வாழ்விடப் பெரும்பெயர்ச்சி நிகழ்வை நான் ஒருநாள் நேரில் கண்டேன். நஹரன கிராமப் பஞ்சாயத்தில் இதைப் பார்த்தேன். இந்த கிராமம் தேவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தேவி ஆறு ஜகத்சிங்பூர், புரி போன்ற ஒடிசாவின் கடலோர மாவட்டங்களைத் தொட்டுச் செல்கிறது. இது மஹாநதியின் பிரதான கிளையாறு.























